இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு, உலகின் முன்னணி நகரங்களுடன் போட்டியிட விரும்புகிறது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் எனக் கூறப்படும் இந்நகரம், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்களை தன்னுடன் இழுத்துக்கொள்கிறது. ஆனால், ஒரு பெரிய சிக்கல் மழை வந்தால் வெள்ளம், சாலைகள் மோசமாகுதல், போக்குவரத்து நெரிசல், குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகள் என தொடர்ந்து நகரம் தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது.
இந்நிலையில், ஜோஹோ நிறுவனர் மற்றும் தொழில்முனைவோர் ஸ்ரீதர் வேம்பு ஒரு முக்கியமான உண்மையை முன்வைக்கிறார். பெங்களூரு வளர்ச்சி பெறவே விரும்புகிறது. ஆனால் அதன் வளர்ச்சி, அதன் சாலைகளில் குதிகால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கும் நொந்த நகரமாக மாறுகிறது என்று கூறினார்.

பெங்களூரு நகரம், இந்தியாவின் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி செய்யும் மிக முக்கியமான மையமாக இருக்கிறது. ஆனால், இது வளர்ச்சியின் காரணமாகும். நகரின் சாலைகள், தண்ணீர் வடிகால்கள், அதிகரித்து வரும் மக்களின் எண்ணிக்கையை சமாளிக்க மருத்துவமனைகள் சிரமப்படுகின்றன. ஒரு தரமான வாழ்க்கை இருக்க வேண்டும் என்றால், நகரத்துக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என வேம்பு கூறுகிறார்.
வேம்பு கூறுகையில், இருப்பதே சரியாக இல்லாத நகர உள்கட்டமைப்பை கொண்டுள்ள நிலையில், அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர விரும்பும்போது, அந்த நகரங்கள் வெகுவேகமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார். உதாரணமாக ஒரு கிராமத்து விவசாயி ஒரு மணி நேரம் வேலை செய்து ரூபாய் 50 சம்பாதிக்கிறான். ஆனால், நகரத்தில் நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் ஒரே ஒரு மணி நேரம் செல்ல ரூபாய் 1000 செலவாகிறது. இதனுடன் போக்குவரத்து மற்றும் மருந்து செலவையும் சேர்த்தால், அந்தக் குடும்பம் நட்டத்தில் விழுகிறது.
இந்தியாவில் நகர்ப்புற மையங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே ஒரு பெரிய பொருளாதார இடைவெளி உள்ளது. கிராம மக்கள், தங்களுடைய உற்பத்திகளை குறைந்த விலையில் விற்று, அதனால் சம்பாதிக்கும் பணத்தை நகரங்களில் விலை உயர்ந்த பொருட்களை வாங்க செலவழிக்கின்றனர். இது வர்த்தக சமநிலையின்மையை உருவாக்குகிறது.
ஒரு பீடி சுற்றும் கிராமத்து பெண் கூட சீனாவில் தயாரிக்கப்பட்ட மொபைலை வாங்குகிறாள் என்று வேம்பு எச்சரிக்கிறார். இது கிராமப்புறத்தில் உற்பத்தி குறைவாக, ஆனால் நுகர்வு அதிகமாக இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. இதனால், கிராமங்களில் பணம் தங்காமல் நகரங்களுக்கு வருகிறது.
இந்த நிலையை சமம் செய்ய அரசாங்கம் வறுமை ஒழிப்பு திட்டங்களை (subsidy schemes) கொண்டு வந்தாலும், அது நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. கிராம மக்கள் நலன்கள் அல்லது உதவித் தொகைகளை சார்ந்து வாழ்கின்றனர். ஆனால் நகர மக்கள் வேலை வாய்ப்பு, தொழில்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டு வாழ்கின்றனர். இது ஒரு சமநிலை இல்லாத சூழ்நிலையை உருவாக்குகிறது.
வேம்புவின் வாதம் என்னவென்றால், பண பரிமாற்றத்துக்கு பதிலாக உண்மையான மாற்றம் என்பது கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. அதாவது, ஊர்களிலேயே தொழில்களை உருவாக்கி, மக்கள் நகரங்களுக்கு வர வேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட வேண்டும்.
ஸ்ரீதர் வேம்பு முன்வைக்கும் தீர்வு மிகவும் தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்கிறது. பெங்களூருவைப் போல நகரங்களை காப்பாற்ற, நாம் உடனடியாக கிராமப்புற உற்பத்தி புரட்சி ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார். அதாவது, ஊர்களில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். வேலையை ஊரிலேயே வழங்க வேண்டும். தொழில்நுட்பமும், அறிவியலும் ஊருக்கு செல்ல வேண்டும். இந்தியாவின் பொருளாதாரத்தை மீண்டும் சீரமைக்க வேண்டுமென்றால், நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களையும் வளமாக்க வேண்டியது அவசியம்.
இந்தப் பிரச்சனை பெங்களூருக்கே மட்டும் அல்ல. சென்னை, மும்பை, ஹைதராபாத், குருக்ராம், புனே என இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் இந்த சிக்கலுக்கு உள்ளாகின்றன. காரணம் ஒரே ஒன்று தான் நகரங்கள் அதிகமான மக்களை தாங்க முடியாத நிலையில் இருக்கின்றன. வளர்ச்சி வேகமாக நடந்தாலும், உள்கட்டமைப்பு வளர்வது மெதுவாக நடக்கிறது. கிராமம் வளமடைந்தால்தான் நகரம் நிம்மதியாக வளரும்.
ஸ்ரீதர் வேம்பு 1968-ல் பிறந்தவர். உலகளாவிய மென்பொருள் நிறுவனமான "Zoho Corporation"-ஐ நிறுவியவர். 2024 ஆம் ஆண்டில் Forbes அவரை 39 பணக்காரராக 5.85 பில்லியன் டாலர் மதிப்புடையவராக மதிப்பிட்டடு. இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர் என அடையாளம் காண்கிறது. வேம்பு தன்னுடைய வாழ்க்கையை சாதாரணமாக, கிராமத்தில் நடத்துகிறார். தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து, அங்குதான் Zoho-வின் ஒரு டெக்னாலஜி மையத்தையும் உருவாக்கியுள்ளார். இதன் மூலம், "உலக தரமான தொழில்நுட்பம் கிராமத்திலிருந்தும் உருவாகலாம்" என்பது அவர் கூறும் முக்கியமான கருத்து ஆகும்.2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸின் 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் வேம்பு குடும்பம் இடம்பெற்றது. மொத்த நிகர மதிப்பு $5.8 பில்லியன் ஆகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications