பெங்களூரு நகரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் இதயமாகத் திகழ்கிறது. 'இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு' என்ற பெயரை பெற்று விளங்கும் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஐடி துறையில் பணியாற்றி வருகின்றனர். முன்னணி நிறுவனங்களின் தலைமையகங்கள், ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் மற்றும் உயர் தொழில்நுட்ப வளாகங்களால் இங்கு தொழில்நுட்ப வாழ்க்கை வேகமாக முன்னேறி வருகிறது. நாள் முழுவதும் அலுவலகங்களில் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, சந்திக்கின்ற வேலைப்பளு, டெட்லைன்கள் ஆகியவை இளைஞர்களின் வாழ்கையை கடுமையாக மாற செய்துள்ளன.
அதே நேரத்தில், ஐடி ஊழியர்களுக்கான வசதிகளும் நிறுவனங்களை பொறுத்து தற்போது அதிகரிக்கின்றன. கூடியளவு ஊதியம், நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள், வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள், ஹெல்த் இன்சூரன்ஸ், உடற்பயிற்சி கூடங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை வாழ்க்கை தரத்தை உயர்த்துகின்றன.

மேலும், பல பணியாளர் பங்குச் சலுகைகள் (ESOPs) மற்றும் தொலைதூர வேலை வாய்ப்பு போன்ற நன்மைகளை வழங்குகின்றன. இந்த சூழலில் பெங்களூரு, தற்போது உலகில் மிகக் குறைந்த செலவில் மென்பொருள் பொறியாளர்களைப் பணியமர்த்தும் நகரமாக உருமாறியுள்ளது.
பெங்களூரு ஐடி ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம்..?: WeAreCity என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை UnboxingBLR வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக $12,000 (சுமார் ரூ.10 லட்சம்) மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரே நிலை பொறியாளர்கள் $125,000 (ரூ.10 கோடிக்கு மேல்) வரை சம்பளம் பெறுகின்றனர். இதன் மூலம், பெங்களூரு ஐடி பொறியாளர்கள் பத்தில் ஒரு பங்கு சம்பளத்திலேயே வேலை செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
உலகளாவிய அளவில் மென்பொருள் பொறியாளர்களுக்கான சராசரி சம்பளம் $46,000 (ரூ.3.94 கோடி). இது பெங்களூருவுடன் ஒப்பிட்டால் மூன்று மடங்குக்கு மேல் அதிகம். மேலும், ஆசியாவின் முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும் போது கூட வித்தியாசம் அதிகமாக உள்ளது. டோக்கியோ - $62,000 (ரூ.5.31 கோடி), சீயோல் - ரூ.51,000 (ரூ.4.37 கோடி), சிங்கப்பூர் - $47,000 (ரூ.4.02 கோடி) ஆகும். இந்த நகரங்களில் சம்பளங்கள் பெங்களூருவை விட 4 முதல் 5 மடங்கு அதிகமாக உள்ளது.
பொதுவாக ஐடி ஊழியர்கள் என்றால் அதிக நேரம் கணினி முன் வேலை செய்ய வேண்டும், புதிய திட்டங்களை வகுக்க வேண்டும், அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும், தரவு மேலாண்மை, வலைத்தளம், மென்பொருள் உருவாக்கம் போன்ற பணிகள் இருக்கும். உலகளவில் திறமை, தொழில்நுட்பம் மற்றும் வேலை நேரத்தை அடிப்படையாகக் கொண்டே சம்பளங்கள் நிர்ணயிக்கப்படுவதை எதிர்பார்க்கும் நிலையில், பெங்களூருவின் திறமையான மென்பொருள் பொறியாளர்கள் தங்களுக்கேற்ப ஊதியம் பெறுகிறார்களா? என்பது இன்று தொழில்துறையில் கேள்விக்குறியாக உள்ளது.
More From GoodReturns

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications