பெங்களூரு இந்தியாவில் ஐடி நகரம், பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த ஐடி மற்றும் டெக் சேவைக்கு உயிர் மூச்சாக உள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் துறையின் பேஸ்மென்ட் பெங்களூர். இப்படி இந்த நகரத்தின் பெருமையை அடுக்கிகொண்டே போகலாம்.
ஆனால் மறுமுனையில் பெங்களூர் டிராபிக் மற்றும் சாலை வசதிகள் குறித்து பெங்களூர் மக்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் பேசி வருகிறது. இதே சரிக்கட்ட வேண்டும் என்றே கர்நாடக அரசு சமீபத்தில் BBMP அமைப்பை 5 பிரிவுகளாக உடைத்து GBA என்ற புதிய பெங்களூர் நிர்வாக அமைப்பை உகுவாக்கியது.

இந்த சூழ்நிலையில் பெங்களூரில் பிளாக்பக் என்ற டிரக் சேவைக்கான டிஜிட்டல் தளத்தின் சிஇஓ ராஜேஷ் டிவிட்டரில், ORR சாலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், சாலையில் இருக்கும் குழிகள் மூலம் 1.5 மணிநேரம் பயணிக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தார். அடுத்த 5 வருடத்தில் சாலை போக்குவரத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரியவில்லை, இதனால் பெங்களூரை விட்டு நானும் எனது நிறுவனமும் வெளியேற முடிவு செய்யவதாக அறிவித்தார்.
இந்த பிரச்சனை கர்நாடக அரசையும், பெங்களூர் நிர்வாக அமைப்பிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இதேவேளையில் ஆந்திர மாநிலத்தின் அமைச்சரான நர லோகேஷ் பிளாக்பக் சிஇஓ ராஜேஷ் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து ஆந்திரவுக்கு அழைத்தார். நர லோகேஷ்-ன் பதிவு கூடுதல் நெருக்கடியை கொடுத்த நிலையில் பிளாக்பக் சிஇஓ ராஜேஷ் தாங்கள் பெங்களூரை விட்டு வெளியேறவில்லை, ORR பகுதியை விட்டு ஊழியர்களுக்கு ஏதுவான இடத்திற்கு தான் மாறப்போகிறோம் என விளக்கம் கொடுத்தார்.
இதற்கு மத்தியில் மோகன்தாஸ் பாய் முதல் கிரன் மசும்தார் வரையில் பலர் டிவிட்டரில் பெங்களூர் நிர்வாகத்தையும், கர்நாடக அரசையும் விமர்சனம் செய்தனர். பல இடத்தில் மக்களும் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த நிலையில் பெங்களூர் சாலைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூரின் 5 நிர்வாக அமைப்புகளும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சாலையை சரி செய்யும் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்காக பெங்களூர் நிர்வாக அமைப்புகளுக்கு கூடுதலாக சுமார் 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தார். இந்த நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் பணிகள் பெங்களூர் முழுவதும் துவங்கியுள்ளது.
இந்த பணிகளின் ஒரு பகுதியாக, புதன்கிழமையன்று கியர் ஸ்கூல் ரோடு, பாலகெரே, வீரண்ணபாளையா, நாகேனஹள்ளி தின்னே மெயின் ரோடு, சாமராஜ்பேட், வசந்த் நகர், மாத்திகேரே, மைசூரு ரோடு, பேகூர் மற்றும் உத்தரஹள்ளி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை சரி பார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல் பெங்களூரு நகர மத்திய மாநகராட்சி, சாலைகளை மேம்படுத்துவதற்கு பணிகளை சென்ட் ஜான்ஸ் சர்ச் ரோடு, கேஆர் சர்க்கிள், ரேஸ் கோர்ஸ் ரோடு, சாலுக்கியா சர்க்கிள், மிஷன் ரோடு, மாரிகவுடா ரோடு மற்றும் ஜேசி ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகள் பணிளை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த ஒரு மாதத்தில், இன்னும் பல சாலைகளை பழுது பார்க்க மாநகராட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதில் முக்கியமாக ஹோசா ரோடு, போர்வெல் ரோடு, கனகபுராவில் உள்ள ஹாலிடே வில்லேஜ் ரோடு, வர்த்தூர்-பனத்தூர் ரோடு, சோமசுந்தர்பாளையா ரோடு, கப்பன் பார்க் சுற்றியுள்ள பகுதிகள், ஹார்லூர்-குட்லு ரோடு, சர்ஜாப்பூர் ரோடு, பாபுசாபாளையா ரோடு மற்றும் அவுட்டர் ரிங் சாலையின் சர்வீஸ் சாலைகள் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன என டெக்கான் ஹெரால்டு தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகள், பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது.
மேலும் தற்போது சாலையில் உள்ல பள்ளங்களை நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும், இவை தற்காலிக தீர்வுகளாக இருப்பதாக மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தப் பணிகள் நீண்ட காலத்திற்கு பயன் அளிக்காமல் போகலாம் என்ற கவலையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
More From GoodReturns

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications