மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) செயல்படுத்தும் பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) திட்டத்தில் முக்கியமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. பெங்களூரின் புறநகர் பகுதியான ஹோஸ்கோட்டே மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஓசூரை இணைக்கும் புதிய சாலை விரிவாக்கம் பணிகள் 2025 மார்ச் மாதத்திற்குள் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) என்பது பெங்களூர் நகருக்கு மத்தியில் இருக்கும் அவுட்டர் ரிங் சாலையை விட பெரிய வட்டமாகும். இது பெங்களூர் கிழக்கு பகுதியில் டப்பாஸ்பெட், டொப்பபல்லபுரா, தேவனஹள்ளி, ஹோஸ்கோட்டே, ஓசூர்-ஐ இணைக்கிறது. இதேபோல் மேற்கு பகுதியில் டப்பாஸ்பெட், மாகடி, ராமநகரா, கனகப்புரா, ஆனேக்கல், ஒசூர் ஆகியவற்றை இணைக்கிறது.

இந்த திட்டம் பெங்களூர் புறநகர பகுதி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது, பெங்களூர் மையப்பகுதியில் மூச்சை மூட்டும் அளவுக்கு இருக்கும் மக்கள் கூட்டம், வாகன நெரிசலைச் சமாளிக்கவும், பெங்களூர் வளர்ச்சி திட்டங்களுக்கும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் இந்த சாலை திட்டம் மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) திட்டம் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புடன், இப்புதிய விரிவாக்கம் மூலம் மொத்த நீளத்தை 102.6 கிலோமீட்டருக்கு அதிகரித்து மொத்த சாலை திட்டம் 288 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக உயரப்போகிறது. 2027 ஆம் ஆண்டில் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டப்பாஸ்பெட்-ல் இருந்து தமிழ்நாடு எல்லை வரை தேசிய நெடுஞ்சாலை 648 என்ற அடையாளத்துடன் இந்த வழித்தடம் செயல்படும், பெங்களூருவின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR).
இந்த சாலை சர்வதேச விமான நிலையம் இருக்கும் தேவனஹள்ளி பகுதியை இணைப்பதால், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு வருவோருக்கு இந்த வழித்தடம் மிகவும் முக்கியமானதாக மாறும்.
STRR திட்டத்திற்காக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெங்களூரு கிழக்கு பகுதியில் இத்திட்டத்தின் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக 12.3 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க உள்ளனர். STRR திட்டத்தில் ஹோஸ்கோட்டே பகுதியில் இருந்து தமிழ்நாடு எல்லை வரையில் சுமாப் 21 கிமீ சாலைக்காக இந்த நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புறநகர் ரிங் ரோடுக்காக கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
STRR திட்டத்தின் கட்டுமானத்தில் மீதமுள்ள ஐந்து பிரிவுகளுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன, இந்த 5 பிரிவு சாலை சுமார் 144.25 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இப்பிரிவு கட்டுமானத்திற்கு மொத்த செலவாக 4,749.74 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த 5 பிரிவுகளின் கட்டுமானம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications