பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் 2025 முதல் 2026-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி கட்டணத்தை 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இதனால் பெற்றோர்கள் கோபம் அடைந்து வருடாந்திர கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான முதல் பருவ கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
சில பள்ளிகள் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வருடாந்திர கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தனது மகனின் பள்ளி கட்டணத்திற்கான கட்டணம் ரூ. 1.2 லட்சத்திலிருந்து ரூ. 2.1 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஒரு பெற்றோர் தெரிவித்தனர். இதில் போக்குவரத்து கட்டணம் அடங்காது என்பதுதான் இன்னும் வேதனை. கோவிட்-க்கு முந்தைய உயர்வு 10 சதவீதமாக இருந்த போதிலும் கோவிட்க்கு பிந்தைய பள்ளி கட்டண உயர்வு 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

பள்ளிக் கட்டண உயர்வு: அடுத்த கல்வியாண்டிற்கான முதல் பருவக் கட்டணத்தை பல பள்ளிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. சில பள்ளிகள் ஆண்டுதோறும் 10%-15% கட்டண உயர்வை மட்டுமே செய்திருந்தாலும், பல பள்ளிகள் 15% என்ற வரம்பை மீறி கட்டணத்தை உயர்த்தி உள்ளன.
கர்நாடகாவின் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் சங்கம், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து கட்டண உயர்வுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
சங்கச் செயலாளரான டி.சசிகுமார் கூறுகையில், வருடாந்திர கட்டண உயர்வு நல்லது தான் என்று குறிப்பிட்டார். "பள்ளி என்பது வெறும் கரும்பலகை மற்றும் மேசை மட்டுமல்ல. பல்வேறு செலவினங்கள் இதற்கும் உள்ளன. அரசாங்கம் பாடப் புத்தக விலைகளை உயர்த்தி வருகிறது. துணி விலைகளிலும் அதிகரிப்பு உள்ளது. நீங்கள் ஏன் அவற்றை கேள்வி கேட்கவில்லை? பள்ளி கட்டண உயர்வு பற்றி மட்டும் ஏன் பேசுகிறீர்கள்? 20% முதல் 30% வரை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 10% முதல் 15% வரை கட்டண உயர்வு ஏற்படுவது அவசியமே" என்று கூறினார்.
ஒருவர் பள்ளி கட்டண உயர்வு குறித்து தனது விரக்தியை சமூக ஊடக தளங்களில் போஸ்ட்டாக பதிவிட்டிருந்தார். "ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகள் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்துகின்றன. இதற்கு எந்த விளக்கமும் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே வேலைக் குறைப்பு அதிகரித்து வருகிறது. வரிகள் மற்றும் வீட்டு கடன்களால் பெற்றோர்கள் பெற்றோர்கள் போராடி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தொடர்ந்து அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications