பெங்களூர் கதை முடிந்ததா..? கர்நாடகாவில் உருவாகும் அடுத்த ஐடி ஹப்.. எங்க தெரியுமா..?

பெங்களூர்: ஐடி ஹப் என்ற உடனே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பெங்களூரு தான். பெங்களூருவில் இல்லாத ஐடி நிறுவனங்களே கிடையாது. அதேபோல ஸ்டார்ட் அப் தலைநகராகவும் பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மற்றொரு நகரமும் ஐடி ஹப் ஆக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அண்மைக்காலமாக தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் பெங்களூருவை தவிர்த்து கர்நாடகாவின் வேறு நகரங்களில் தங்களுடைய அலுவலகங்களை நிறுவத் தொடங்கியுள்ளன.

பெங்களூர் கதை முடிந்ததா..? கர்நாடகாவில் உருவாகும் அடுத்த ஐடி ஹப்.. எங்க தெரியுமா..?

இதில் அனைவருக்கு விருப்பமான சாய்ஸாக இருப்பது கடற்கரை நகரமான மங்களூரு. கர்நாடக மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் மங்களூருவும் ஒன்று. இங்கே இன்போசிஸ், காக்னிசன்ட் மற்றும் இன்வெஞ்சர் டெக்னாலஜி போன்ற பிரதான நிறுவனங்கள் ஏற்கனவே தங்களுடைய அலுவலகங்களை நிறுவி விட்டன.

அண்மையில் கூட டெக் மகேந்திரா நிறுவனம் மங்களூரில் தனது சேட்டிலைட் அலுவலகத்தை திறந்திருக்கிறது. இதன் மூலம் பல்வேறு பெரிய நிறுவனங்களின் கவனமானது மங்களூரு பக்கம் திரும்பியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இங்கே நான்கு முதல் ஐந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவில் வளர்ந்து வரக்கூடிய தகவல் தொழில்நுட்ப மையமாக மங்களூரு மாறி வருகிறது என 99 கேம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரோகித் பாத் தெரிவித்துள்ளார். மங்களூரு நோக்கி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் ஏனெனில் அடுத்த சில ஆண்டுகளில் மிக முக்கியமான தகவல் தொழில்நுட்ப நகரமாக மங்களூரு மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

மங்களூர் பகுதியில் நிறுவனங்கள் அலுவலகங்களை அமைப்பதற்கு ஏற்ற வகையில் வரிச்சலுகை மற்றும் சாதகமான தொழில் கொள்கைகளை அரசு கொண்டுவர வேண்டுமென நோவிகோ சொல்யூஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான முகமது அனீஸ் கூறியுள்ளார்.

மங்களூர் பகுதியில் உள்ள கல்வி நிலையங்கள் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், சைபர் செக்யூரிட்டி ஆகிய துறை சார்ந்த படிப்புகளை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறைகளில் சிறந்த பணியாளர்கள் கிடைக்க கூடிய ஒரு நகரமாக மங்களூரு இருக்கும் என கூறப்படுகிறது.

கடற்கரையோரம் உள்ள நகரம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவது, திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆகியவை காரணமாக இந்தியாவின் முக்கியமான ஐடி ஹப்பாக மங்களூரு மிக விரைவில் மாற இருக்கிறது என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+