பெங்களூருவில் மாராத்தஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிபுரியும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான மென்பொருள் பொறியாளர், மஞ்சுநாத் லேஅவுட்டில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதுல் சுபாஷ் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது பிரிந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி 24 பக்கக் குறிப்பை விட்டுச் சென்றது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுபாஷ் மரண குறிப்பு செய்யப்பட்டவைகளைக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நீதி நியாயம் வேண்டும் என்று கேட்டுகொண்டு தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். அதில், அவரது மனைவி, அவரது தாய், சகோதரர் மற்றும் மாமா ஆகியோரால் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அவரது முடிவுக்கு திருமண முரண்பாடுகள் காரணம் எனவும், சுபாஷ் தனது நான்கு வயது மகனையும் அடையாளமாக குறிப்பிட்டு, அவரை அப்பாவி என்று கூறியுள்ளார்.

அவரது குறிப்பில், சுபாஷ் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்றத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்துள்ளார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட சட்டப் போராட்டங்களில் சிக்கியதாகவும், அவர் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். அதில், கொலை மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் நடத்தை குற்றச்சாட்டுகள் மற்றும் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.2 லட்சம் தேவை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறியுள்ளார்.
சுபாஷ் தனது இறப்புக்கு முன், அவரது மரண குறிப்பில் வாகனச் சாவிகள் மற்றும் முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார். அத்துடன் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அட்டையையும் அவர் வீட்டில் வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
சுபாஷ் தனது 24 பக்க மரண குறிப்பை பல பெறுநர்களுக்கு மின்னஞ்சல் செய்ததுடன், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய வாட்ஸ்அப் குழுவுடன் பகிர்ந்து கொண்டார். அது சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது.
இது தொடர்பாக அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் சுபாஷின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகாரில், சுபாஷின் சகோதரர் தனது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ததாகவும், இந்த வழக்குகளை தீர்க்க ரூ.3 கோடி செட்டில்மென்ட் கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த விசாரணை தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications