இந்தியாவின் மிகவும் பரபரப்பான இரண்டு மெட்ரோ நகரங்களான பெங்களூரு மற்றும் மும்பை இடையேயான ரயில் பயணம் இனி வேகமாகவும், மேலும் வசதியாகவும் மாறவிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட உதாயன் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து, இவ்விரு நகரங்களை இணைக்கும் இரண்டாவது நேரடி அதிவிரைவு ரயிலுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
பயண நேரம் 18 மணி நேரமாக குறையும் : புதிதாக வரவிருக்கும் இந்த அதிவிரைவு ரயில் சேவை, தற்போதைய உதாயன் எக்ஸ்பிரஸ் ரயிலை விட பயண நேரத்தை சுமார் 18 மணி நேரம் குறைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள உதாயன் எக்ஸ்பிரஸ், 1,136 கி.மீ தூரத்தை கடக்க 23 மணி நேரம் 35 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே, புதிய ரயில் சேவை பயணிகளுக்கு மிகவும் விரைவான மாற்றுப் பாதையாக அமையும்.

புதிய ரயில் வழித்தடம் :இந்த அதிவிரைவு ரயில், மத்திய கர்நாடகா வழியாக ஹுப்பள்ளி-தர்வாட் வழியைப் பயன்படுத்தும். பெங்களூருவில் உள்ள சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினஸில் (SMVT) இருந்து புறப்பட்டு, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் (CSMT) முடிவடையும்.
இந்த ரயில் துமக்கூரு, தாவண்கெரே, ஹாவேரி, ஹுப்பள்ளி-தர்வாட் மற்றும் பெலகாவி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நிற்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், இந்த ரயில் நிறுத்தங்கள் மற்றும் வழித்தடங்கள் தற்காலிகமானவையாகவே கருதப்படுகின்றன.
உதாயன் எக்ஸ்பிரஸ் வழியில் மாற்றம் : தற்போதைய உதாயன் எக்ஸ்பிரஸ் ரயில், தொட்டபல்லாபுரா, குண்டக்கல், ராய்ச்சூர், யாத்கிர், கலபுரகி மற்றும் சோலாப்பூர் போன்ற 30-க்கும் மேற்பட்ட நிறுத்தங்களுடன் நீண்ட வழியில் செல்கிறது. இந்த நீண்ட வழித்தடமே பயண நேரம் அதிகரிக்க காரணம். புதிய ரயிலின் விரைவான மத்திய கர்நாடக வழித்தடம் காரணமாகப் பயண நேரம் கணிசமாகக் குறையும்.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இந்த முடிவு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கர்நாடகா வழியாக மற்றொரு ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம் மும்பைக்கு செல்லும் தொடர்பை மேம்படுத்த வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை இருந்து வந்தது. எனவே, இந்த புதிய சேவை லட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த புதிய ரயில் சேவையை தொடங்க அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே இணை அமைச்சர் வி. சோமண்ணா ஆகியோருக்கு அவர் சமூக வலைதளம் மூலம் நன்றியும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications