பெங்களூர் இந்தியாவின் ஐடி நகரம் என்ற பெயரை பெற்று இருந்தாலும், டிராபிக் என்ற கரும்புள்ளி இந்நகரத்திற்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. பெங்களூர் டிராபிக் குறித்து பலரும் பேசியிருந்தாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் நிறுவனரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் செய்த பதிவு மக்கள் மத்தியில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பதிவில் பெங்களூரில் 31 கிலோமீட்டர் செல்ல சுமார் 2.5 மணிநேரம் ஆனதாக பதிவிட்டுள்ளார். இது மட்டும் அல்லாமல் பெங்களூரில் போக்குவர்த்து வசதிகள் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதாகவும், வாகனங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், வாகன ஓட்டிகள் மத்தியில் driving discipline பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், சாலை வசதிகள் மோசமாக இருப்புதாகவும் தனது எக்ஸ் பதிவில் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு டெக் துறையினர் தாண்டி அரசு நிர்வாகம், நாட்டின் முக்கிய தலைவர்கள் என வர்த்தக துறையில் உயர்மட்டத்தில் இருக்கும் பலரின் கவனத்திற்கு சென்றது.
சமீபத்தில் தான் கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் டிகே சிவகுமார் பெங்களூருவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.2,000 கோடி மதிப்பிலான திட்டமும் அறிவித்தார்.
கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ஷாக் பதிவுக்கு பலரும் இதுதான் பல கோடி மக்கள் தினமும் எதிர்கொண்டு வருகின்றனர் என்றும், இதனால் மக்களின் நேரம், உடல் நிலை வீணாகிறது என்றும் கருத்துக்களை அள்ளி விசியுள்ளனர்.
இன்னும் சிலர் உங்களுக்கு எவ்வளவோ பரவாயில்லை, நான் வெறும் 8 கிலோமீட்டருக்கு தினமும் 2 மணிநேரம் பயணம் செய்து வருகிறேன் என தெரிவித்தார், இது பலருக்கு இன்னும் அதிர்ச்சி கொடுத்தது.


Click it and Unblock the Notifications