பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூர் நகரம் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பெங்களூர் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருந்தாலும் இந்த பிரச்சனை முடிவதாக தெரியவில்லை.
பெங்களூரின் அவுட்டர் ரிங் சாலை பெங்களூரு நகரிலேயே அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக உள்ளது. குறிப்பாக காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை பீக் அவர்களில் இந்த சாலையை கடப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த சூழலில் தான் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் , பல்வேறு ஐடி நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் அண்மையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பீக் அவர்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முக்கியமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. பெங்களூர் அவுட்டர் ரிங் சாலையை பொருத்தவரை ஐடி காரிடாருக்கு செல்லக்கூடிய சாலை என்பதால் இங்கே டிராபிக் பிரச்சினை தீர்ப்பதில் ஐடி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என பெங்களூரு மாநகராட்சி கருதுகிறது.
அவுட்டர் ரிங் சாலை வழியே செல்ல வேண்டிய ஐடி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு வேலை நேரத்தை மாற்றி அமைப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் அனைவருக்கும் அலுவலகத்தை திறக்காமல் சில அலுவலகங்களை காலை 7 மணி அளவில் திறப்பதன் மூலம் பீக் அவர்களில் அதிகமான ஊழியர்கள் சாலைகளில் பயணம் செய்வது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாரங்களிலுமே புதன்கிழமைகளில் ஐடி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தருவது என பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது .இதன் மூலம் வாரத்தின் ஒரு நாள் சில உள் கட்டமைப்பு மேம்பாடு வேலைகளையும் செய்து முடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அவுட்டர் ரிங் சாலையில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன அதனை தீவிரமாக முடிப்பது என மாநகராட்சி தரப்பில் அப்போது உறுதி தரப்பட்டிருக்கிறது.
மேலும் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் தனிப்பட்ட வாகனங்களில் வருவதை குறைக்கும் வகையில் பேருந்து வசதிகளை கொண்டு வரலாம் என்றும் ஒரே இடத்தில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தங்களுடைய ஊழியர்களுக்கு என பேருந்து வசதிகளையும், கார் வசதிகளையும் ஏற்படுத்தலாம் என பரிந்துரை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த பகுதிகளில் எல்லாம் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஐடி ஊழியர்களுக்கு நிகழ் நேர போக்குவரத்து நெரிசல் விவரங்களை தருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பீக் அவர்களில் அவுட்டர் ரிங் சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என ஐடி நிறுவனங்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
written by : Devika Manivannan
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications