பெங்களூரு: தொக்கா மாட்டிக்கொண்ட 30 பென்ஸ், ஃபெராரி கார்.. வாங்குனா மட்டும் போதுமா?

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முறையாக வரி செலுத்தாத சொகுசு கார்கள் உரிமையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 30க்கும் அதிகமான ஆடம்பர கார்களை பறிமுதல் செய்திருப்பதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர்.

பெங்களூருவில் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இங்கே அதிக சம்பளம் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதேபோல ஆடம்பர கார்களின் பயன்பாடும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரு போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாக வரி செலுத்தாத 30 ஆடம்பர கார்களை கைப்பற்றி உள்ளனர் .

பெங்களூரு: தொக்கா மாட்டிக்கொண்ட 30 பென்ஸ், ஃபெராரி கார்.. வாங்குனா மட்டும் போதுமா?

சாலை வரி உள்ளிட்ட வரிகளை கட்டாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் இந்த கார்களை பறிமுதல் செய்திருப்பதாக பெங்களூரு போக்குவரத்து காவல் துறை தெரிவிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரு போக்குவரத்து துறை அதிகாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு நடத்தி Ferrari, Porsche, BMW, Audi, Aston Martin மற்றும் Range Rover உள்ளிட்ட 30 சொகுசு கார்களை கைப்பற்றியுள்ளனர்.

போக்குவரத்து துறை துணை ஆணையர் மல்லிகார்ஜுன் தலைமையிலான 41 பேர் கொண்ட குழுவினர் ஆர்டிஓ அதிகாரிகளோடு இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையாக மாநில வரி மற்றும் சாலை வரி உள்ளிட்டவை செலுத்தாமல் நகரில் பயன்பாட்டில் இருக்கும் கார்களை அடையாளம் கண்ட அவர்கள் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர். இந்த கார்களின் உரிமையாளர்கள் அரசுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த வரியை செலுத்தி விட்டு கார்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல ஹைதராபாத் நகரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு செய்ததாக 11 ஆடம்பர கார்களை பறிமுதல் செய்தனர். அப்போது கார் உரிமையாளர்களிடம் இருந்து சுமார் எட்டு கோடி ரூபாய் வரை நிலுவையில் இருந்த வரி வசூல் செய்யப்பட்டது.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி பார்க்கும்போது இந்தியாவிலேயே அதிக அளவு சாலை வரி விதிக்கப்படும் மாநிலமாக கர்நாடகா இருப்பதாக சொல்லப்படுகிறது. கர்நாடகா மாநில அரசு வாகனத்தின் வயது, அதன் விலை, அதில் பயன்படுத்தப்படும் எரிபொருள், மற்றும் எஞ்சின் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரியை நிர்ணயம் செய்கிறது. எனவே காரின் கட்டணத்தில் 13 சதவீதத்தில் இருந்து சுமார் 90 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+