இந்தியாவின் சிலிக்கான் வேலின்னா சும்மாவா!! பெரும் பணக்காரர்களின் நகரமாகும் பெங்களூரு..!

பெங்களூரு: இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் அடுத்த 16 ஆண்டுகளில் 100 மில்லியன் டாலருக்கும் (சுமார் 830 கோடி ரூபாய்) அதிகமான சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் எண்ணிக்கை 150 மடங்கு அதிகரிக்கும் என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. Henley & Partners சார்பாக Centi-Millionaire Report 2024 என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பெங்களூரு நகரத்தில் மிகப்பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 150 சதவிகிதம் வரை உயரும் எனக் கூறியுள்ளது.

தற்போது பெங்களூருவில் சுமார் 13,200 கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் மொத்த செல்வம் 800 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பெங்களூருவில் கோடீஸ்வரர் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் இது 150 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது.

 இந்தியாவின் சிலிக்கான் வேலின்னா சும்மாவா!! பெரும் பணக்காரர்களின் நகரமாகும் பெங்களூரு..!

முன்னதாக உலகிலேயே செல்வ வளம் மிக்க நகரம் 2024 என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் பெங்களூருவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக பெங்களூருவில் கடந்த 10 ஆண்டு காலத்தில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 120% உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்த நிலையில் தான் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட சென்டி மில்லியனர் எனப்படும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அடுத்த 16 ஆண்டுகளில் பெங்களூருவில் நாம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பார்க்கும்போது கடந்த 10 ஆண்டுகளில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் இப்படி பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சீனாவில் 108 சதவீதமும் அமெரிக்காவில் 81 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஐரோப்பாவை பொருத்தவரை அங்கே 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 26 சதவீதம் தான் உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழலில் கடன் மற்றும் பிற நிதி பொறுப்புகள் இல்லாமல் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் எண்ணிக்கை உலக அளவில் 29,350 ஆக இருக்கிறது. இவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் தொழில் முனைவோர்கள் ஆவர். இவ்வாறு பெரும் பணக்காரர்கள் அதிகமாக வசிக்கும் நகரமாக நியூயார்க் இருக்கிறது.

நியூயார்க் நகரத்தில் மட்டும் 74 சென்டி மில்லினியர்கள் வசிக்கின்றனர். அடுத்ததாக லாஸ் ஏஞ்சல்ஸில் 496 சென்டி மில்லினியர்கள் வசிக்கின்றனர். ஆசியாவை பொருத்தவரை பெய்ஜிங், சிங்கப்பூர், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய நகரங்கள் அதிக அளவிலான பெரும் பணக்காரங்கள் வசிக்கும் நகரமாக இருந்து வருகிறது. இந்த பட்டியலில் இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களும் இடம் பிடித்துள்ளன.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+