பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டிலும் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முன் கூட்டியே பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பயன்பாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதன்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரை கட்டுமான பணிகள், தோட்டப்பணிகள் மற்றும் கார்களை கழுவுவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரை கொண்டு வாகனங்களை கழுவுவது, தோட்டங்களுக்கு தண்ணீர் விடுவது, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மால் மற்றும் சினிமா தியேட்டர்களில் குடிநீர் அல்லாத மற்ற தேவைகளுக்கு குடிநீரை பயன்படுத்துவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சாலைகளை சுத்தம் செய்வது மற்றும் சாலை கட்டுமான பணிகளுக்கும் குடிநீரை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதுபோல யாரேனும் குடிநீரை வீணடிப்பதை பார்த்தால் உடனடியாக 1916 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் மார்ச் மாதம் இருந்து மே மாதம் வரையிலான காலம் கோடைகாலமாக இருக்கிறது. கடந்த ஆண்டு பெங்களூரு மாநகரில் கோடைகாலத்தில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் முன்கூட்டியே தண்ணீர் சிக்கன நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.
பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.4 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய பெங்களூரில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது, போதிய மழையும் பெய்யவில்லை எனவே மக்கள் இதனை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் குறிப்பாக குடிநீரை வீணடிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
பெங்களூரில் குடிநீர் வழங்கல் வாரியமும் இந்திய அறிவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் பெங்களூருக்கு உட்பட்ட 80 வார்டுகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருப்பதாகவும் அங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் 5 மீட்டர்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூருவைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் நிலத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு பெங்களூரு, ஒயிட் பீல்டு உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் நிலத்தடி நீரையே நம்பி இருக்கின்றன. எனவே இங்கே நிலத்தடி நீர்மட்டம் குறையும் போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications