குருகிராம்: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களூர் நகரம் அண்மைக்காலமாக தண்ணீர் தட்டுப்பாடு, கடுமையான போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில் பெங்களூருக்கு மாற்றாக ஒரு ஸ்டார்ட் அப் நகரம் எதுவாக இருக்கும் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
லிட்டில் ஸாஸ் (Little saas) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான உதித் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் நீங்கள் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவி வருகிறீர்கள் என்றால் பெங்களூரு அல்ல குருகிராம் தான் உங்களுக்கு சரியான இடமாக இருக்கும் என கூறி இருந்தார்.

அவரது இந்த பதிவு தான் எக்ஸ் தளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. உதித் கோயங்கா, உரிய சம்பளத்திற்கு திறமையான நபர்கள் குருகிராமில் கிடைக்கிறார்கள், சரியான வாடகைக்கு அலுவலகங்கள் கிடைக்கின்றன, ஒரு வாரத்துக்கு முன்புதான் நான் குருகிராமுக்கு இடம் பெயர்ந்தேன், இங்கே ஒரு சிறிய தலைமை அலுவலகத்தை நிறுவி விட்டேன் , 32 லட்சம் ரூபாய்க்கு இரண்டு ஒப்பந்தங்களை முடித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
உதித் கோயங்காவின் இந்த பதிவு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் குளிர்காலங்களில் வேலை செய்வதற்கு உகந்த இடமாக குருகிராம் இருக்காது என தெரிவித்துள்ளனர். பெங்களூருவை ஒப்பிடும்போது குருகிராமில் அலுவலகங்களுக்கான வாடகை என்பது அதிகமாக இருக்கிறது என்றும் பெங்களூருவைப் பொறுத்தவரை அங்கே நிறைய கிரியேட்டிவிட்டியும் ஸ்டார் டப்புகளுக்கு உகந்த ஒரு கலாச்சாரமும் நம்மால் காண முடியும் என்றும் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நகரம் என்றால் அது பெங்களூராக மட்டுமே இருக்க முடியும் , இரண்டாவது இடத்தை வேண்டுமானால் குருகிராமிற்கு வழங்கலாம் என ஒரு பயனர் கூறியுள்ளார். ஸ்டார்ட் அப் தொடங்க குருகிராம் சிறந்த இடமாக இருக்கலாம், ஆனால் குருகிராமில் உங்களது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அதிகமாக செலவிட வேண்டி இருக்கும் மும்பையிலும் இதே நிலைமைதான் என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
பெங்களூருவில் மட்டும்தான் ஸ்டார்ட் அப்களுக்கான நெட்வொர்க்கிங் கிடைக்கும் என பலர் பெங்களூருவுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்துள்ளனர். இதனிடையே அன்அகாடமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌரவ் மஞ்சல் மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களை நாம் வார இறுதி நாட்களில் பொழுதுபோக்குக்கான இடங்களாக வைத்துக் கொள்ளலாமே தவிர ஸ்டார்ட் அப்களுக்கான இடமாக பார்க்க முடியாது. ஸ்டார்ட் அப்களுக்கு உகந்த இடம் பெங்களூரு மட்டுமே , அங்கு தான் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications