Nationwide Strike: பிப்ரவரி 12 நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு..!

பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு முழுவதும் மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. சுமார் பத்து முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த 'பாரத் பந்த்' வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதன் மூலம் ஏறத்தாழ 30 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இதில் கலந்துகொள்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொழிலாளர், விவசாயி ஆகியோருக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி, இந்தக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்த உள்ளனர்.

Nationwide Strike: பிப்ரவரி 12  நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு!

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (AITUC) பொதுச் செயலாளர் அமர்ஜீத் கெளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிப்ரவரி 12 அன்று குறைந்தபட்சம் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார். இது, கடந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற சுமார் 25 கோடி தொழிலாளர்களின் எண்ணிக்கையை மிஞ்சும் என்றும் அவர் கூறினார்.

கெளர் வெளியிட்ட தகவலின்படி, இந்தப் போராட்டத்தால் சுமார் 600 மாவட்டங்களில் பணிகள் பாதிக்கப்படும். இது முந்தைய போராட்டங்களில் பாதிக்கப்பட்ட 550 மாவட்டங்களை விட அதிகம். மாவட்ட மற்றும் வட்டார அளவில் உள்ள ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் விவசாய அமைப்புகள், துறைசார் கூட்டமைப்புகளின் ஆதரவின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களான ஒடிசா மற்றும் அஸ்ஸாமில் கிட்டத்தட்ட முழு அடைப்பு இருக்கும் என்றும், மற்ற மாநிலங்களும் இந்தப் போராட்டத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படும் என்றும் அமர்ஜீத் கெளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளில், வரைவு விதை மசோதா, மின்சார திருத்த மசோதா மற்றும் SHANTI சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெறுவது முக்கியமானதாக உள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) மீட்டெடுப்பதுடன், 'விக்ஸித் பாரத் - ரோஜ்கார் அவுர் அஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம், 2025' ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவில் INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC உள்ளிட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த வார இறுதியில், சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. PTI செய்திக்குறிப்பின்படி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு "முழுவதுமாக சரணடையச் செய்வதாகும்" என்று அந்த அறிக்கையில் கடுமையாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பிப்ரவரி 12 அன்று அனைத்து விவசாயிகளும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்துமாறு சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாயிகளை வலியுறுத்தியுள்ளது.

தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி, முந்திரி, கயிறு, கைத்தறித் தொழில்கள், மீன்பிடி மற்றும் மீன் சந்தைப்படுத்தல், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், கடைகள், துறைமுகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழில்கள், ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனங்கள், கட்டுமானம், திட்ட அடிப்படையிலான வேலைவாய்ப்பு, லாட்டரி சேவைகள், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தொலைத்தொடர்பு, மின்சாரம், மோட்டார் போக்குவரத்து, ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 12 அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தில் பல தொழிற்சங்கங்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் பங்கேற்க இருப்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களின் செயல்பாடுகளும், பணியாளர்கள் வந்து செல்லும் போக்குவரத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+