இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்திய மத்திய அரசு, கடந்த ஒரு ஆண்டாக உணவு பொருட்கள் விலையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.
கடந்த ஓராண்டில் இந்தியாவில் தானியங்களின் ரீடைல் விலை சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் மக்களின் சுமையை போக்க மத்திய அரசு நிவாரணம் அளிக்கும் வகையில் மானிய விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தது.

இதன்படி மத்திய அரசு 29 ரூபாய் என்ற மானிய விலையில் 'பாரத் அரிசி'யை செவ்வாய்க்கிழமை அரசு விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் கிடைக்கும்.
மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தலைநகர் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாத்-ல் பாரத் அரிசியை அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்திய உணவுக் கழகம் (FCI) சுமார் 5 லட்சம் டன் அரிசியை, முதல் கட்டமாக இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகிய இரண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கும், இதை சில்லறை வணிக நிறுவனமான கேந்திரிய பந்தர் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளது.

இந்த அமைப்புகள் 5 கிலோ மற்றும் 10 கிலோ அரிசியை பிரத்தியேகமாக பேக் செய்து, பாரத் என்ற பிராண்டின் கீழ் ரீடைல் விற்பனை செய்யும். இந்த அரிசி இ-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
மத்திய அரசு ஏற்கனவே உணவு பணவீக்கத்தை குறைக்க பாரத் பிராண்டின் கீழ் கோதுமை மாவை பாரத் ஆட்டா பெயரில் ஒரு கிலோ 27.50 ரூபாய்க்கும், பாரத் கடலை பருப்பை 60 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது. கோதுமை மாவு மற்றும் கடவை பருப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அரிசிக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24 ஆம் ஆண்டு மத்திய அரசு ஏற்றுமதி குறைப்பு முதல் பல கட்டுப்பாடுகளை விதித்த போதும் விலை குறையாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு ரீடைல் விற்பனையாளர்கள் முதல் மொத்த விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள், பெரிய ரீடைல் நிறுவனங்கள் வரையில் அவர்களுக்கு சரக்கு இருப்பு குறித்த தரவுகளை கேட்டுள்ளது. இதன் மூலம் உணவு பொருட்கள் பதுக்கப்படுகிறதா என்பதை கண்டுப்பிடிக்க உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications