டெல்லி: இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தினை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைக்கு 2 மாநிலங்களில் மட்டுமே கட்டணம் உயர்த்தியுள்ள நிலையில், விரைவில் நாடு முழுவதும் அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது.
ஏற்கனவே நாடு முழுவதும் பணவீக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இது மேற்கொண்டு வாடிக்கையாளார்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கலாம்.
என்ன திட்டம்?
இப்போது ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணமாக 99 ரூபாய் உள்ளது. இந்த ரீசார்ஜ் கட்டணத்தில் நொடிக்கு 2.5 பைசா கட்டணம் மற்றும் 200 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இந்த திட்டத்தில் தான் திருத்தம் செய்துள்ளது. இனி பயனர்கள் குறைந்தபட்சம் 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.
ஏர்டெல் திட்டங்களில் அப்படி என்ன வசதி?
ஏர்டெல் நிறுவனம் கட்டணம் அதிகரிப்பு செய்திருந்தாலும், இது ஒரு சோதனை முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனினும் விரைவில் இது முழுமையாக அமலுக்கு வந்தாலும் மறுபதற்கில்லை. பார்தி ஏர்டெல்லின் இந்த புதிய திட்டத்தில் அன்லிமிடெட் கால் வசதி, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ் எம் எஸ் வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய திட்டங்கள் இனி இருக்குமா?
ஏர்டெல்லின் இந்த அடிப்படையாக கொண்ட இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வரலாம் என தெரிகிறது. இதனால் ஏர்டெல்லில் உள்ள சிறிய திட்டங்கள் இனி இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக தற்போது ஏர்டெல்லில் வழங்கப்பட்டு வரும் திட்டமான 99 ரூபாய் இருக்க வாய்ப்பிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்புவை அதிகரிக்க திட்டம்
தற்போதைய நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது அர்பு விகிதத்தினை அதிகரிக்க மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. தற்போது டெலிகாம் சந்தையில் நிலவி வரும் போட்டிக்கு மத்தியில், ஏர்டெல்லின் இந்த முடிவு சிறிய அளவிலான வாடிக்கையாளர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அதிகரிக்க கட்டணம்
கடந்த ஆண்டில் 2021ம் ஆண்டில் இதுபோன்ற சோதனையை மேற்கொண்டது. அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் சலுகையை தேர்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications