பார்தி டெலிகாம் நிறுவனத்தின் மெகா திட்டம்.. 2 மாதங்களில் மீண்டும் ரூ.9,000 கோடி நிதி திரட்ட முடிவு.!

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனமான பார்தி ஏர்டெலின் ஹோல்டிங் நிறுவனமான பார்தி டெலிகாம் (Bharti Telecom), நிதிச் சந்தையில் தனது கடன் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் சுமார் ரூ.9,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது நிதித் திரட்டல் முயற்சி இதுவாகும். இந்த நடவடிக்கையானது, நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம் மற்றும் கடன் மேலாண்மை திறனை காட்டும் விதத்தில் உள்ளதாக் வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதற்காக இந்த ரூ.9,000 கோடி நிதி திரட்டல்..?: பார்தி டெலிகாம் நிறுவனம், இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. இதில், இரண்டு ஆண்டுகளுக்கு முதிர்ச்சியடையும் பத்திரங்களுக்கு சுமார் 7.25% வட்டியும், மூன்று ஆண்டுகளுக்கு முதிர்ச்சியடையும் பத்திரங்களுக்கு சுமார் 7.35% வட்டியும் வழங்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பார்தி டெலிகாம் நிறுவனத்தின் மெகா திட்டம்.. 2 மாதங்களில் மீண்டும் ரூ.9,000 கோடி நிதி திரட்ட முடிவு.!

நிறுவனம் திரட்டும் இந்த ரூ.9,000 கோடி நிதி, முக்கியமாக அதன் அடுத்தடுத்த கடன் முதிர்வுகளை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. பார்தி டெலிகாமிற்கு டிசம்பர் மாதத்தில் சுமார் ரூ.7,250 கோடி மதிப்பிலான பத்திரங்களும், மேலும் 2026 முதல் 2034 ஆம் ஆண்டுக்குள் ரூ.26,650 கோடி மதிப்பிலான பத்திரங்களும் முதிர்ச்சியடைய உள்ளன. முதிர்ச்சியடையும் பழைய கடன்களை செலுத்துவதற்கு புதிய மற்றும் மலிவான வட்டி விகிதத்தில் கடன் பெறுவது, அனைத்து நிறுவனங்களும் பின்பற்றும் ஒரு சிறந்த நிதி உத்தியாகும்.

மலிவான வட்டி விகிதத்திற்கான காரணம் என்ன..?: தற்போதைய குறியீட்டு வட்டி விகிதங்களை கணக்கில் கொண்டால், இந்த நிதித் திரட்டல் கடந்த 4 ஆண்டுகளில் பார்தி டெலிகாம் பெற்ற மிகவும் மலிவான கடனாக அமையும் என்று நிதிச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் CRISIL Ratings நிறுவனம், பார்தி டெலிகாமின் கடன் பத்திரங்களுக்கு வழங்கிய உயரிய 'AAA' மதிப்பீடுதான்.

இந்த உயரிய கடன் மதிப்பீடு, கடன் வழங்கும் நிறுவனங்கள் (வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவை) பார்தி டெலிகாம் மீது அதிக நம்பிக்கை வைக்க உதவுகிறது. இதனால், நிறுவனம் மிகவும் குறைந்த வட்டியில் கடன் பெற முடிகிறது. கடந்த அக்டோபரில், இந்நிறுவனம் இதேபோன்ற பத்திரங்களை சற்று அதிக வட்டிக்கு (7.35% மற்றும் 7.45%) விற்று ரூ.10,500 கோடியை திரட்டியது குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற முதலீட்டு நிறுவனங்களும், சில வெளிநாட்டு வங்கிகளும் இந்த கடன் பத்திரங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+