இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் கடந்த 2 வருடங்களாகக் கல்லூரியில் இருந்து பட்ட படிப்பை முடித்து வெளியேறும் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்காமல் இருந்த வேளையில், ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சர்வதேச அளவில் ஐடி சேவை துறையில் பெரும் மாற்றங்கள் நடந்து வரும் வேளையில், இந்தியா தொடர்ந்து புதிய வர்த்தகத்தை பெறுவது மட்டும் அல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அதிகப்படியான ஊழியர்களை உருவாக்கி அனைத்து மாற்றத்திற்கும் தயாராகியுள்ளது.

இந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் காலாண்டில் மட்டும் 5,452 புதிய ஊழியர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 6,06,998 ஆக உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து நடப்பு நிதியாண்டில், TCS சுமார் 40,000 புதிய பட்டதாரிகளை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரியில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்ற அச்சத்தைப் போக்கும் வகையில் TCS நிறுவனத்தின் தலைமை மனிதவள மேலாண்மை அதிகாரி (CHRO) மிலிந்த் லக்கட் முக்கியமான விளக்கத்தையும் ஜூன் காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம் பணி சூழலை மாற்றியமைத்தாலும், TCS ஊழியர்கள் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வதில் வல்லுநர்கள் என்று அவர் உறுதிப்படுத்தினார். இதேபோல் உலக நாடுகளுக்கு இந்தியா முக்கிய திறன் மையமாக இருப்பதால் இதில் எவ்விதமான மாற்றமும் எதிர்காலத்தில் இருக்காது என தெரிவித்தார்.
மேலும், TCS நிறுவனம் ஊழியர்களுக்கு 4.5% முதல் 7% வரை சம்பள உயர்வை வழங்கியுள்ளது. சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு 10-12% வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மிலிந்த் லக்கட் தெரிவித்தார்.
இதோடு மட்டுமல்லாமல், TCS நிறுவனத்தின் 'எலிவேட் ரன்வே' (Elevate Runway) திட்டம் ஐடி ஊழியர்களின் புதிய தொழில்நுட்பத்தை கற்கும் பாதை வேகமெடுத்துள்ளது, இதன் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளது, மேலும் இளநிலை ஊழியர்களின் (ஜூனியர் ஊழியர்கள்) தொழில் வளர்ச்சியை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
மேலும், TCS நிறுவனத்தின் நடுத்தர நிலை ஐடி பணியாளர்களுக்கான 'டிரான்ஸ்ஃபர்மேஷன்' (MLT) திட்டம், நிறுவனத்திற்குள் புதிய தொழில்நுட்ப பணிகளை ஏற்றுக்கொள்ளச் சந்தைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு உதவுகிறது என்றும் மிலிந்த் லக்கட் தெரிவித்தார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏஐ வந்தாலும் இந்திய ஐடி துறையும், இந்திய ஐடி ஊழியர்களையும் அசைக்க முடியாது என்பதை மிலிந்த் லக்கட் பேச்சு கூறுகிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications