இந்திய வங்கித் துறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) வரம்பை 20 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. இந்த முடிவுக்கு பின்பு மிகப்பெரிய காரணமும், தேவையும் உள்ளது என்பது தான் தற்போதைய முக்கியமான விஷயம்.
மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைகள் செயலாளர் எம்.நாகராஜு பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு முதலீட்டு அளவை உயர்த்துவது குறித்த தகவலை வெளியிட்டார். இந்த மாற்றம் மூலம் இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக (விக்சித் பாரத்) மாற்றும் இலக்குக்கு ஏற்ப வங்கிகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2026இல் "விக்சித் பாரத் வங்கி உயர்மட்டக் குழு" அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்தக் குழு தான் பொதுத்துறை வங்கி உரிமை அமைப்பு, பெரிய வங்கிகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்யும்.
உதாரணமாக அமெரிக்க வங்கிகளில் வெளிநாட்டு முதலீடுகள் கட்டுப்பாடுகள் என்பது எதுவுமில்லை, ஆனால் முதலீடு செய்ய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்தியாவில் 49 சதவீதம் என்ற லிமிட் வைக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. சரி பெரிய வங்கிக்கான அவசியம் என்ன..?
இந்தியாவுக்கு உலக அளவில் போட்டியிடும் வலிமையான வங்கிகள் தேவை என்பது மத்திய அரசின் கருதுகிறது. பெரிய திட்டங்கள், உள்கட்டமைப்பு, கிரீன் எனர்ஜி, மேம்பட்ட உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு நிதி திரட்ட வேண்டியுள்ளது. இந்த நிலையில் பல சிறிய வங்கிகளை வைத்து சிறிய சிறிய திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதை தாண்டி பெரிய வங்கிகள் மூலம் மாபெரும் திட்டத்திற்து நிதியை அளிக்க முடியும்.
இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 12ஆக குறைக்கப்பட்டது, இந்த எண்ணிக்கை குறைப்பு என்பது வங்கிகள் இணைப்புகள் மூலம் நடந்தது. ஆனால் இணைப்பு மட்டும் போதாது. போதுமான மூலதனம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கான பெரிய வங்கி அமைப்பு தேவை.

இங்குதான் வெளிநாட்டு முதலீடு முக்கிய பங்கு வகிக்கும் என்று அரசு கருதுகிறது. அரசு குறைந்தபட்சம் 51 சதவீத பங்கை தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள 49 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறக்கப்படலாம்.
பொதுத்துறை வங்கிகள் எப்போதும் இல்லாத வகையில் தற்போது வலிமையாக உள்ளதால் வங்கி ஒருங்கிணைப்பை வேகமாகவும், சரியான முறையில் செய்திட வேண்டும் என விரும்புகிறது. இதற்கான முதல் படி தான் பட்ஜெட்டில் குழு அமைத்தது.
வெளிநாட்டு முதலீடு அதிகரித்தால் நீண்டகால மூலதனம் கிடைக்கும். பொதுத்துறை வங்கிகளின் வலிமை அதிகரிக்கும். இது விக்சித் பாரத் இலக்கை அடைவது சாத்தியமாகும். இதன் மூலம் இந்தியாவில் BIG Bank உருவாக்கி சீனா, அமெரிக்காவின் வளர்ச்சியுடன் போட்டிப்போட முடியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications