ராமர் கோயில் அருகே ரூ.40 கோடி பிளாட்டை வாங்கி போட்ட அமிதாப் பச்சன்.. இது நான்காவதாம்..!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அயோத்தியில் தனது சொத்து முதலீடுகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். சமீபத்தில் அவர் அங்கு நான்காவது நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலம் சுமார் 25,000 சதுர அடியாக இருக்கிறது. இதற்காக அவர் ரூ.40 கோடி செலவிட்டுள்ளார். இந்த நிலம், அயோத்தியில் முக்கியமான 'சரயு' ரியல் எஸ்டேட் திட்டம் அருகே இருக்கிறது. இந்த பகுதியில் அமிதாப் பச்சன் ஏற்கனவே ரூ.14.5 கோடி முதலீடு செய்திருந்தார்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, அந்த ஊரில் பெரிய மாற்றங்கள் நடக்கின்றன. சுற்றுலா வளர்ச்சி, புதிய சாலைகள், நவீன கட்டடங்கள் என வளர்ச்சியடைந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, பச்சன் பல வகை சொத்துகளில் முதலீடு செய்து வருகிறார். அதே நேரத்தில், பாலிவுட் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிடின் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் பச்சன் ரூ.20 கோடி முதலீடு செய்துள்ளார். இரண்டு சொத்துகள், ஒவ்வொன்றும் ரூ.10 கோடியாக உள்ளது.

ராமர் கோயில் அருகே ரூ.40 கோடி பிளாட்டை வாங்கி போட்ட அமிதாப் பச்சன்.. இது நான்காவதாம்..!!

கடந்த ஆண்டு, ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சில நாட்கள் முன்பு, பச்சன் 5,372 சதுர அடி நிலத்தை ரூ.4.54 கோடிக்கு வாங்கினார். மேலும், தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனின் பெயரில் 54,000 சதுர அடி நிலத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிலத்தில் தனது தந்தைக்கு நினைவுச் சின்னம் கட்ட திட்டமிட்டுள்ளார். இது பச்சன் குடும்பத்தின் தனிப்பட்ட மரியாதையை மட்டும் காட்டவில்லை, அவர்களது வணிகத்தில் உணர்ச்சி கலந்திருப்பதையும் வெளிக்காட்டுகிறது.

அயோத்தியில் வளர்ச்சி திட்டத்தில் பங்கேற்கும் ஒருவர் கூறுகையில், அமிதாப் பச்சன் அங்கு சொத்து வாங்குவது பணத்திற்காக மட்டும் இல்லை. அவர் அயோத்தியின் ஆன்மீக மற்றும் கலாசார மரபுகளுக்கு மதிப்பளிக்கிறார் என்றார். அயோத்தி மட்டுமல்ல, மும்பையிலும் பச்சன் சொத்து வணிகத்தில் தைரியமாக செயல்படுகிறார். சமீபத்தில் அவர் மும்பை அந்தேரியில் உள்ள ஒரு டூப்ளக்ஸ் வீட்டை ரூ.83 கோடிக்கு விற்றார். அதே வீடு, அவர் 2021-இல் ரூ.31 கோடிக்கு வாங்கியிருந்தார். மூன்று வருடங்களில் ரூ.52 கோடி லாபம் என்றால் அது ஒரு பெரிய வெற்றி தான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், 2023-இல், அவர் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இணைந்து 10 அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.25 கோடிக்கு வாங்கியுள்ளனர். இதனால், பச்சன் குடும்பத்தின் சொத்து முதலீடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் கணக்கீட்டுடன் நடக்கின்றன என்பதும் தெளிவாகிறது. அமிதாப் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன், கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் மூலம், பச்சன் குடும்பத்தின் செல்வம் பற்றிய தகவல்கள் வெளியானது. அந்த பிரமாணத்தில், பச்சன் தம்பதிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,578 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ரூ.849.11 கோடி அசையும் சொத்துகள் (அதாவது நிலம், வீடு, கட்டடங்கள் போன்றவை) மற்றும் ரூ.729.77 கோடி அசையா சொத்துகள் (பணத்தைச் சேர்ந்த முதலீடுகள், பங்குகள், நகைகள், வங்கி வட்டி முதலியன ஆகும்). தொடர்ச்சியாக பச்சன் வாங்கும் புதிய சொத்துகளால் இந்த மதிப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புண்டு.

அயோத்தியில் அமிதாப் பச்சன் வாங்கும் சொத்துகள் வெறும் முதலீடுகளாக மட்டுமல்லாமல், ஒரு வகையில் அவரது உணர்வுப் பிணைப்பையும் வெளிக்காட்டுகிறது. தந்தை நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கும் திட்டம், அவரது தனிப்பட்ட பார்வையை உணர்த்துகிறது. ஒருபுறம் ஆன்மீகம், மறுபுறம் வணிகம் ஆகிய இரண்டும் இணைந்து அமிதாப் பச்சனின் ரியல் எஸ்டேட் பயணத்தை சிறப்பாக உருவாக்குகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+