2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட லென்ஸ்கார்ட் நிறுவனம் குறுகிய காலத்திலேயே கண் கண்ணாடி (Eyewear) தொழிலில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இகாமர்ஸ் மற்றும் விற்பனை நிலையங்கள் ஆகிய இரு வழிகளிலும் இந்நிறுவனம் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. லென்ஸ்கார்ட் நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கண்ணாடி தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மொத்தம் 2,500க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 2,000 கடைகள் உள்ளன.
மேலும் இந்நிறுவனம் மூலோபாய கையகப்படுத்துதல்களையும் செய்துள்ளது. குறிப்பாக ஏஐ அடிப்படையிலான விஷன் ஸ்டார்ட்அப் நிறுவனமான டேங்கோ ஐ மற்றும் பிரான்ஸை சேர்ந்த கண்ணாடிகள் பிராண்டான லு பெட்டிட் லுனெட்டியரில் கணிசமான பங்குகளை கொண்டுள்ளது.

லென்ஸ்கார்ட் முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக ஐபிஓவில் களம் இறங்கும் எண்ணத்தில் இருந்தனர். ஆனால் லென்ஸ்கார்ட் நிறுவனர் பெயுஷ் பன்சால், கடந்த இரண்டாண்டுகளில் இரண்டாம் நிலை ஒப்பந்தங்களை நடத்தினர். இதனால் முதலீட்டாளர்கள் பணப்புழக்கத்திற்காக பங்குகளில் பகுதியளவு விற்பனை செய்ய முடிந்தது.
இந்நிலையில் லென்ஸ்கார்ட் நிறுவனம் தற்போது புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்துக்குள் பங்குச் சந்தை அமைப்பிடம் ஐபிஓவுக்கான வரைவு ஆவணங்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26ம் நிதியாண்டின் இறுதிக்குள் லென்ஸ்கார்ட் நிறுவனம் ஐபிஓவை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் பொதுச் சந்தையில் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் நுழைய உள்ளது.
சர்வதேச விரிவாக்கம் மற்றும் ஐபிஓ திட்டமிடலுக்கு மத்தியில், லென்ஸ்கார்ட் நிறுவனம் லாபத்தை நோக்கி செயல்பட்டு வருகிறது. இழப்புகளை குறைத்துந நிலையான வருவாய் வளர்ச்சியை எட்டி வருகிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.10 கோடியாக குறைந்துள்து.
2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.64 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. கடந்த நிதியாண்டில இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 43 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.5,428 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் எபிட்டா 2 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.856 கோடியாக உள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications