ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்த ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா..!

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட்டார். இதில் பலரும் எதிர்பார்த்து போலவே ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது, இது வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கான ஈஎம்ஐ குறைப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்த உதவும்.

RBI ஆளுநர், உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மத்திய வங்கிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாக கூறினார். பல்வேறு நாடுகளில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கிகளுக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன. இந்தியாவில், இந்த சவால்களை எதிர்கொள்ள RBI தொடர்ந்து தீவிரமாக செயல்படுவதாக ஆளுநர் உறுதியளித்தார்.

ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்த ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா..!

ஆர்பிஐ கவர்னர் தொடர்ந்து 3வது முறையாக ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது பலரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்தாலும், மார்ச் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி தான் இன்றைய வட்டி குறைப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது. கடந்த 3 கூட்டத்தில் ஆர்பிஐ 1 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. இதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ குறையும் காரணத்தால் கூடுதல் பணம் கையில் இருக்கும், இதன் மூலம் வர்த்தகம் மேம்படும் என்பது தான் ஆர்பிஐ கணக்கு.

ரெப்போ விகித குறைப்பை தாண்டி, இன்று ரிசர்வ் வங்கி பண இருப்பு விகிதம் அதாவது CRR 100 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து, தற்போதைய 4% இலிருந்து 3% ஆக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இந்த குறைப்பு செப்டம்பர் 2025 முதல் நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, வங்கிகளுக்கு கூடுதல் பணப்புழக்கத்தை வழங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

CRR குறைப்பு மூலம் வங்கிகளுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணப்புழக்கம் கிடைக்கும். இது நீண்டகால பணப்புழக்கத்தை உறுதிப்படுத்துவதோடு, வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஆதாரத்தை வழங்கும். இதனால், வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க முடியும், இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-26 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP வளர்ச்சியை 6.5% ஆக மதிப்பிட்டுள்ளது, இது முந்தைய கணிப்புடன் மாற்றமின்றி உள்ளது. காலாண்டு வாரியாகப் பார்க்கும்போது, முதல் காலாண்டில் 6.5%, இரண்டாம் காலாண்டில் 6.7%, மூன்றாம் காலாண்டில் 6.6%, மற்றும் நான்காம் காலாண்டில் 6.3% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையான கணிப்பு, இந்திய பொருளாதாரத்தின் உறுதியான வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது, இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்.

மேலும் இன்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள சில்லறை விலை பணவீக்கம் 2025-26 நிதியாண்டிற்கு 3.7% ஆக கணித்துள்ளது, இது முந்தைய கணிப்பான 4% இலிருந்து குறைவாகும். இது நாட்டில் விலைவாசியை குறைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. காலாண்டு வாரியாக பார்க்கும் போது, முதல் காலாண்டில் 2.9% (இது முந்தைய கணிப்பில் 3.6%), இரண்டாம் காலாண்டில் 3.4% (இது முந்தைய கணிப்பில்3.9%), மூன்றாம் காலாண்டில் 3.9% (இது முந்தைய கணிப்பில் 3.8%), மற்றும் நான்காம் காலாண்டில் 4.4% (இது முந்தைய கணிப்புக்கு மாற்றமின்றி) என பணவீக்கம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+