அமெரிக்காவில் கீர்ன் கார்டு வழங்குவதில் நாடு வாரியான கட்டுப்பாடுகள் உள்ளது, இந்தக் கட்டுப்பாடு தற்போது முழுமையாக நீக்கப்பட்டு அமலாக்கம் செய்யத் தயாராக உள்ளது. இது அமலாக்கம் செய்யப்படும் நிலையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக இருக்கும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கிரீன் கார்டு வழங்குவதில் இருக்கும் நாடு வாரியான கட்டுப்பாடுகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அதிபரின் இறுதி கையெழுத்திற்காக இந்த மசோதா காத்துக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவின் முதல் செங்குத்து காடு கட்டிடத்தை பாருங்கள்
1,40,000 கிரீன் கார்டு
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,40,000 பேருக்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு கொடுக்கப்படுகிறது. இந்தக் கீர்ன் கார்டு வழங்குவதற்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் அதிகப்படியாக 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டு கொடுக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு உள்ளது.
இந்தக் கட்டுப்பாடு தான் தற்போது நீக்கப்பட உள்ளது.
8 லட்சம் இந்தியர்கள்
ஏப்ரல் 2020 கணக்கின் படி சுமார் 8 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பத்திது காத்துக்கொண்டு இருக்கின்றனர் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவை அமைப்பின் தரவுகள் கூறுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் மசோதா கையெழுத்தாகும் பட்சத்தில் அதிகளவிலான இந்தியர்கள் கிரீன் கார்டு பெற முடியும்.
சிக்கல்
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அடைந்தாலும், தற்போது புதிதாகக் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மறுபரீசிலனை செய்து அதிபரின் கையெழுத்திட வேண்டும். ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது, இந்த மசோதாவில் சீன ராணுவத்துடன் தொடர்புடைய சீன மக்களுக்கு இது பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் பிரச்சனை வர வாய்ப்புள்ளதாக சட்ட ஆலோசகரான நந்தின் நாயர் தெரிவித்துள்ளார்.
ஹெச்1பி விசா
இந்த 7 சதவீத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 10 வருடமும் முழுமையாக முடிந்த நிலையில் முதல் 9 வருடத்தில் 70 சதவீத கிரீன் கார்டுகள் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்குச் சென்றுள்ளது. 10வது வருடத்தில் இது 50 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications