ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் தென்கொரியாவின் போஸ்கோ குழுமம் இணைந்து இந்தியாவில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட ஒருங்கிணைந்த ஸ்டீல் தொழிற்சாலை அமைக்க இன்று (அக்டோபர் 29 தேதி) ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் இந்தியாவில் ஸ்டீல், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இணைந்து செயல்பட ஒரு கட்டமைப்பை நிறுவ உள்ளது.

இந்த இரண்டு குழுமங்களும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறது.
ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் போஸ்கோ குழுமத்தின் இணைப்பு இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தித் திறனை அதிகரித்து, இரு நாடுகளிலும் sustainability முயற்சிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மும்பையில் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைமையகத்தில், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் போஸ்கோ தலைவர் சாங் இன்-ஹ்வா மற்றும் இரு வர்த்தக குழுமத்தின் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அதிநவீன ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டீல் உற்பத்தி ஆலை மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான எகோசிஸ்டம் அமைக்கப்பட உள்ளது. போஸ்கோ நிறுவனம் இந்த மாபெரும் முதலீட்டு திட்டத்திற்காக இதற்கு முன்பு அதானி உடன் கூட்டணி சேர முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீல் துறையில் ஏற்கனவே அசத்தி வரும் JSW குழுமத்திற்கு போஸ்கோ உடனான கூட்டணி அதிநவீன தொழில்நுட்பம், புதிய சப்ளை செயின் ஆகியவை கிடைக்கும். மேலும் போஸ்கோ இந்தியாவில் 2012 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.
இந்தியாவில் சென்னை, டெல்லி, புனே, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஸ்டீல் ஆலையை வைத்துள்ளது. போஸ்கோ ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான ஸ்டீல் உலோகம் சார்ந்த சேவைகளையும், சப்ளைகளையும் செய்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் JSW Steel நிறுவனப் பங்குகள் 0.71 சதவீதம் சரிந்து 960.60 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications