அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சமீபத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவனங்களை எச்சரித்தார். பொருளாதார மந்த நிலை வரலாம் என்பதால், மக்கள் பெரியளவிலான பொருட்கள் வாங்குவதை தள்ளி வைக்கலாம் என கூறியிருந்தார்.
இது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சமீபத்தில் ஜெப் பெசோஸ் கூறியிருந்தார்.
இந்த பேட்டியில் அமெரிக்க மக்கள் புதிய கார்கள் மற்றும் டிவிகளை வாங்க வேண்டாம் என்றும் கூறினார். ஏனெனில் அமெரிக்கா மந்த நிலையை நோக்கி காத்துக் கொண்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எச்சரித்துள்ளார்.
கடன் அதிகம்
அமெரிக்கர்களின் வீட்டுக்கடன் 16.5 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. அமெரிக்கர்கள் கடனை நம்பியிருக்கிறார்கள். ஆக மக்களுக்கு எனது அறிவுரை.மேசையில் இருந்து சில அபாயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் வாங்க போகின்றீர்கள் என்றால் அதனை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். அந்த பணத்தை சேமித்து வைத்திருங்கள். என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் என பெசோஸ் கூறியிருந்தார்.
கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்
நீங்கள் ஒரு பெரிய அளவிலான டிவியினை வாங்க நினைக்கும் தனி நபர் எனில், கொஞ்சம் உங்கள் பணத்தை வைத்திருங்கள். நிலைமையை கொஞ்சம் கண்கானியுங்கள்.
இது மட்டும் அல்ல, புதிய வாகனங்கள் அல்லது பிரிட்ஜ் எதுவாக இருந்தாலும் சரி, கொஞ்சம் பொறுங்கள். தற்போது பொருளாதாரம் சரியில்லை. அனைத்தும் மெதுவாக உள்ளன. பல துறைகளிலும் பணி நீக்கங்கள் உள்ளன. அதனை பார்த்துக் கொண்டுள்ளீர்கள்.
சிறு வியாரிகளுக்கு அட்வைஸ்
அமேசானின் முன்னாள் தலைமை அதிகாரி சிறு வணிக உரிமையாளார்கள் தங்கள் கையில், பண இருப்பினை அதிகரிக்க புதிய உபகரணங்கள் வாங்கி போடுவதை கொஞ்ச காலத்திற்கு தள்ளிபோடுங்கள் என அறிவுரை கூறினார். உங்களால் முடிந்தவரை இருப்பை அதிகரியுங்கள். வரவிருக்கும் மோசமான காலத்தினை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
நன்கொடை
இந்த பேட்டியின்போது பில்லியனர் ஜெப் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியினை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தார். பெசோஸின் சொத்து மதிப்பு ப்ளும் பெர்க் அறிக்கையின் படி, 123.9 பில்லியன் டாலராகும்.
பணி நீக்கம் தொடரும்
அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஆண்டி ஜெஸ்ஸி அமேசானில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பணி நீக்கம் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார். இது 2023ம் ஆண்டில் வணிக சூழலுக்கு ஏற்ப இந்த பணி நீக்க நடவடிக்கையானது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பணி நீக்கமானது வருடாந்திர செயல்பாட்டின் ஒரு நடவடிக்கை தான் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளுக்கும் பொருந்தும்
அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகின் பல முன்னணி பொருளாதார நாடுகளும் மந்த நிலையை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பணவீக்க விகிதமானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் பல நாடுகளின் பொருளாதாரமும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. ஆக ஜெப் பெசோஸ்-ன் இந்த அறிவிப்பானது பெரும்பாலான நாட்டினருக்கும் பொருந்தும் எனலாம். என்ன பிரண்ட்ஸ் நீங்களும் கொஞ்சம் ரெடியா இருங்க.. சேமிக்க ஆரம்பியுங்க
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications