பெண்கள் பெரும்பாலும் திறமை படைத்தவர்கள் என்று கூறுவார்கள். ஆண்கள் கடின உழைப்பாளிகள் என்றால், பெண்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். வீட்டில் ஆண்கள் வேலைக்கு சென்று விட்டால், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இருக்கும் மீதி நேரத்தில் என்ன செய்து வருமானம் ஈட்டலாம் என்ற யோசனைகளை வளர்த்தி தானும் சம்பாதிக்க ஆசைப்படுவர். அந்த வகையில்தான் பீகார் மாநிலத்தில் பிரதீபா ஜா என்ற பெண் காளான் வளர்ப்பை வெறும் ரூ.1000 முதலீட்டில் தொடங்கி மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் வசிக்கும் பிரதீபா ஜா, தனக்கு திருமணத்திற்குப் பிறகு காளான் வளர்ப்பைத் தொடங்கினார். வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இந்த காளான் பண்ணையில் இன்று மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு, இந்த பெண் தனது வேலையின் மீதான ஆசையை வெளிப்படுத்தி, குறுகிய காலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார்.

பிரதீபாவுக்கு 15 வயதாக இருந்தபோது, அவரது தந்தை புற்றுநோயால் இறந்தார். தந்தையின் மறைவிற்குப் பிறகு, அவரது குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதுமட்டுமின்றி பிரதீபாவின் தாயாரும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதிபாவிற்க்கு 16 வயதில் திருமணம் நடந்ததால், திருமணத்தால் 10ம் வகுப்பு படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. திருமணத்திற்குப் பிறகு, பிரதீபா மிர்சாபூர் ஹன்சி கிராமத்திற்கு வந்தார். இங்கே, ஒரு சாதாரண குடும்பத்தைப் போலவே, பிரதிபா நாள் முழுவதும் வீட்டு வேலைகளில் பிஸியாக செய்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சிறிது நாட்கள் கழித்து பிரதீபாவின் கணவர் ஹைதராபாத்திற்க்கு மாற்றப்பட்டார். அப்போது அவருடன் பிரதிபா ஹைதராபாத் சென்றார். அவரது மாமியார் உடல்நிலை சரியில்லாததால், பிரதீபா தனது மாமியார் வீட்டிற்கு திரும்ப வேண்டியிருந்தது. இங்கு பிரதிபாவுக்கு ஒரு விளம்பரத்தில் இருந்து காளான் வளர்ப்பு யோசனை கிடைத்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்த பிரதீபாவுக்கு, தன் அப்பா விவசாயத் துறையில் வேலை பார்த்து, பல காளான் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. இங்கிருந்துதான் காளான் விவசாயம் செய்ய பிரதீபா முடிவு செய்தார்.
பொதுவாக, கிராமத்துப் பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் விவசாயத்தை மேற்கொள்ளும் பிரதீபாவின் முடிவு அவரது கணவரால் ஏற்றுகொள்ளப்பட்டது. இதற்காக, பிரதீபா முதலில் தர்பங்கா விவசாயத் துறையை நாடினார். அங்குள்ள அதிகாரிகள், பிரதீபாவை பீகார் வேளாண் பல்கலைக்கழகம், சபோர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிற்சிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி அவர் காளான் வளர்ப்பு பற்றி பிரதீபா கற்றுக்கொண்டார்.
காளான் வளர்ப்பு பயிற்சிக்குப் பிறகு, பிரதீபா ஒரு கிலோ காளான் ஸ்பான் (விதைகள்) பெற்றார். இது தவிர மேலும் 4 கிலோ விதைகளை பிரதீபா ரூ.600க்கு வாங்கினார். இப்போது பிரதீபா 5 கிலோ விதைகளுடன் வீட்டில் உள்ள காலி இடத்தில் 50 மூட்டை காளான் விதைகளை நட்டு வைத்துள்ளார். அவற்றுடன் 400 முதலீட்டில் நெல் வைக்கோல் மற்றும் பாலி பைகளை வாங்கி இன்று பிரதீபா மூன்று வகையான காளான்களை பயிரிடுகிறார். இதனுடன் காளான் முட்டையும் தயார் செய்யப்படுகிறது. வெறும் ரூ.1000 முதலீட்டில் தொடங்கிய பிரதீபா இன்று இந்த தொழிலின் மூலம் மாதந்தோறும் 2 லட்சம் சம்பாதிக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications