மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பிப்ரவரி 28 அன்று மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆர்பிஐ கவர்னரை சந்தித்துள்ளார்.
பில் கேட்ஸ் தங்கள் அலுவலகத்திற்குச் சென்று கவர்னர் சக்திகாந்த தாஸ் உடன் விரிவாகப் பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தியதாக ஆர்பிஐ தனது டிவிட்டர் கணக்கில் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
பில் கேட்ஸ்
உலகின் மிகவும் பிரபலமான டெக் கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் நன்கொடையாளராக இருக்கும் பில் கேட்ஸ் இந்தியாவில் உடல்நலம், கல்வி மற்றும் பிற துறைகளில் வணிக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியவிற்கு வந்துள்ளார். 2023 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் பில் கேட்ஸ் செயல்பாடுகள் மிகவும் புதிதாகவும், வேகமாகவும் உள்ளது.
இந்தியா
சமீபத்தில் கூட, பில் கேட்ஸ் இந்தியாவில் வணிகம் மற்றும் பிற செயல்பாடுகளை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளை ஆய்வு செய்ய நேரடியாக வந்துள்ளார்.
பில் கேட்ஸ் டிவீட்
பூமியில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் குறைந்த வளங்கள் உள்ளன. ஆனால், அந்தக் கட்டுப்பாடு இருந்தபோதிலும் உலகம் எப்படி முன்னேற முடியும் என்பதை இந்தியா நமக்குக் காட்டியது என்று பிப்ரவரி 27 ஆம் தேதி பில் கேட்ஸ் ட்வீட் செய்தார்.
முக்கிய விஷயம்
பில் கேட்ஸ் மற்றும் சக்திகாந்த தாஸ் மத்தியிலான சந்திப்பில் யூபிஐ, ஈ-ரூபாய், டிஜிட்டல் பேமெண்ட், வங்கி துறையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் பயன் குறித்து பேசப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி20 கூட்டம்
இந்தியாவின் ஜி20 தலைமை பொறுப்பு கீழ், 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் வாக்குறுதி' - மீள்திறன் மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரங்களை உருவாக்குவதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ், பில் கேட்ஸ்
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை விருந்தினராகவும், சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார். இவருடன் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரும் டிரஸ்டி-யுமான பில் கேட்ஸ் கெளரவ விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
முக்கிய தலைவர்கள்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தான் பில் கேட்ஸ் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பில் கேட்ஸ் மட்டும் அல்லாமல் MOBIKWIK உபாசனா டக்கு, ZestMoney இன் இணை நிறுவனர் மற்றும் CEO லிஸி சாப்மேன், ஓபன் ஃபைனான்சியல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிறுவனர் மற்றும் COO மேபெல் சாக்கோ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications