உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் இன்றைய வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது. கடந்த சில வாரங்களாக 1 லட்சம் டாலருக்கும் அதிகமாக தொகைக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வந்த பிட்காயின் இன்று 92,292 டாலர்களுக்கு விலை குறைந்தது.
இந்த கூர்மையான வீழ்ச்சிக்கு அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டொனால்டு டிரம்ப் வழக்கம் போது தேவையில்லாமல் உதார் விட்டதை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடுமையாக மறுத்துள்ளது மூலம் முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோகரன்சி மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவுவெல் தலைமையிலான FOMC கூட்டத்தில் எதிர்பார்த்தபடி அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இருப்பினும், எதிர்கால வட்டி விகிதக் குறைப்புகள் குறித்த பெடரல் ரிசர்வ்-ன் கணிப்புகள் முதலீட்டு சந்தையை பாதித்தது.
பெடரல் ரிசர்வ்-ன் இந்த கடுமையான நிலைப்பாடு பங்குச்சந்தை, தங்கம் மட்டும் அல்லாமல் பிட்காயின் உட்பட கிரிப்டோகரன்சிகளையும் பாதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு 108,309 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியதை தொடர்ந்து பிட்காயின் விலையில் இன்று 92,292 டாலராக குறைந்துள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம், பிட்காயின் மதிப்பு உயர டொனால்டு டிரம்ப் பேச்சு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் பிட்காயின் மதிப்பு சரிய பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல்-ன் பேச்சு முக்கிய காரணமாக உள்ளது. இருவரும் அப்படி என்ன பேசினார்கள்..? வாங்க முழு கதையும் சொல்கிறேன்.
டொனால்டு டிரம்ப் கடந்த ஆட்சியின் போதே தேவையில்லாமல் பல முறை உதார் விட்டு மாட்டிக்கொண்டது நினைவிருக்கும். இந்த முறை அதிபர் தேர்தலில் வெற்ற பெற்றதில் இருந்து பல அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இப்படி அவர் பேசிய பேச்சு தான் பிட்காயின் 90000 டாலரில் இருந்து 108,309 டாலர் வரை உயர காரணமாக இருந்தது.
டொனால்டு டிரம்ப் கிரிப்டோ ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் டிரம்ப் கடந்த வாரம், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா எப்படி தனது எண்ணெய் தேவைக்காக பல இடத்தில் இருந்து திரட்டி எண்ணெய் இருப்பு சேமிக்கிறதோ, இதேபோன்று டிஜிட்டல் நாணயம் அதாவது கிரிப்டோகரன்சி தேசிய கையிருப்பை உருவாக்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதுக்குறித்து மீண்டும் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார் டிரம்ப், இந்த தகவல் வெளியான பின்பு தான் பிட்காயின் 108,309 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது.
இந்த வாரம் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் புதன்கிழமை, அமெரிக்க மத்திய வங்கி பிட்காயினை சேமித்து வைப்பதற்கான எந்தவொரு அரசு முயற்சியிலும் ஈடுபட விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தினார். "மத்திய வங்கிகள் பிட்காயின் வைத்திருக்க அனுமதிக்கப்படுவது இல்லை," என்று பவல் இரண்டு நாள் நாணய கொள்கைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். இதனால் கடந்த 2 நாட்களாக பிட்காயின் மதிப்பு தாறுமாறாக குறைந்து வருகிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications