முதல் முறையாக 1,10,000 டாலரை எட்டிய பிட்காயின்.. கிரிப்டோகரன்சி சந்தையில் புதிய புரட்சி..!!

உலகின் முன்னணி கிரிப்டோ கரன்சி பிட்காயின் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2025 மே மாதம், இது முதல் முறையாக 110,000 அமெரிக்க டாலரை கடந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமெரிக்க அரசின் நம்பிக்கையான நடவடிக்கைகள், பெரிய முதலீட்டாளர்களின் அதிக கவனம், மற்றும் புதிய நிறுவனங்கள் அதிக அளவில் பிட்காயினை வாங்குவதும் இருந்தன. இதனையடுத்து, பிட்காயின் தனது வரலாற்றிலேயே முதன்முறையாக 110,000 டாலர் என்ற உச்ச அளவை கடந்துள்ளது. இது போன்ற ஒரு நிலைமை கிரிப்டோ சந்தையை ஆர்வமுடன் பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய நாடுகளில் பிட்காயின் மதிப்பு 2.2 சதவீதம் உயர்ந்தது. இதன் மூலம் அதன் விலை 110,707 டாலராக உயர்ந்தது. பின்னர் கொஞ்சம் குறைந்தாலும், இது வரலாற்றில் முதல் முறையாக அதிகமாக உயர்ந்த தரமாகும். அமெரிக்க அரசு தற்போது ஸ்டேபிள்காயின் (Stablecoin) என்ற வகை கிரிப்டோ பணத்திற்கான புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னேறியுள்ளது. இதனால், கிரிப்டோ பணம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு தெளிவான விதிமுறைகள் அமையும் என நம்பப்படுகிறது. இதுவே சந்தையில் நம்பிக்கையை கூட்டியுள்ளது.

 முதல் முறையாக 1,10,000 டாலரை எட்டிய பிட்காயின்.. கிரிப்டோகரன்சி சந்தையில் புதிய புரட்சி..!!

Michael Saylor என்பவர் நிர்வகிக்கும் Strategy நிறுவனம், 50 பில்லியன் டாலர் மதிப்பில் பிட்காயினை வைத்திருக்கிறது. இவர் தொடர்ந்தும் பிட்காயின் வாங்குவதால் மற்ற நிறுவனங்களும் பிட்காயினை வாங்கத் துவங்கியுள்ளன. Cantor Fitzgerald என்ற பெரிய நிறுவனத்தின் துணை நிறுவனம், Tether மற்றும் SoftBank ஆகியவற்றுடன் இணைந்து Twenty One Capital என்ற புதிய நிறுவனம் தொடங்கியுள்ளது. இது பிட்காயின் வாங்கி வைத்திருக்கும் முறைமையை பின்பற்றும்.

இந்திய வேருடைய Vivek Ramaswamy உருவாக்கிய Strive Enterprises என்ற நிறுவனமும், Nasdaq பட்டியலிலுள்ள மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து, பிட்காயினை கையிருப்பில் வைத்திருக்க புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் பிட்காயின் வாங்க நிதி திரட்ட பங்குகள், மாற்று பத்திரங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்துகின்றன.

Deribit என்ற கிரிப்டோவுக்கான பங்கு சந்தையில், மக்கள் 110,000 டாலர், 120,000 டாலர் மற்றும் 300,000 டாலர் என்ற மதிப்பில் பிட்காயின் மேலும் உயரும் என எதிர்பார்த்து விருப்ப பங்குகளை வாங்கியுள்ளனர். இது பிட்காயின் எதிர்கால வளர்ச்சிக்கான நம்பிக்கையை காட்டுகிறது.

IG என்ற நிறுவனத்தில் பணிபுரியும் Tony Sycamore என்ற நிபுணர் கூறுகையில், பிட்காயின் ஜனவரி மாதத்தில் 75,000 டாலர் வரை குறைந்தது இது ஒரு இடைக்கால சரிவு என்றாலும், இது ஒரு நல்ல சந்தையின் ஒரு பகுதி தான் என்றும் கூறுகிறார். மேலும், பிட்காயின் தொடர்ந்து 110,000 டாலரை தாண்டி நிலைத்திருந்தால், அடுத்த இலக்கு 125,000 டலராக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Take a Poll

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பெயரில் உருவாக்கப்பட்ட மேம்காயின் (memecoin) முதலீட்டாளர்களுடன் சந்திப்பு ஒன்றை வாஷிங்டனுக்கு அருகே உள்ள அவரது கோல்ஃப் கிளப்பில் நடத்த உள்ளார். இந்த நிகழ்வால், அதிபருக்கு நேரடி நன்மை ஏற்படும் என்பது போல தோன்றுவதால், சில நெறிமுறை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது, அரசியல் மற்றும் நிதி ஒழுங்கு முறைகளில் சிக்கல் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+