பிட்காயின் இன்று உலக நாடுகளில் ஒரு முதலீடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு டிஜிட்டல் கரன்சியாகும். எனினும் மத்திய அரசு இதனை இந்தியாவில் தடை செய்யலாம் என கூறப்படுகிறது.
எனினும் சர்வதேச அளவில் பிட்காயினில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடந்த ஞாயிற்றுகிழமையன்று பிட்காயின் அதன் வரலாற்று உச்சமான 61,711.87 டாலர்களை தொட்டது.
இந்த நிலையில் திங்கட்கிழமை நிலவரப்படி, மீண்டும் 56,000 டாலர்களை தொட்டுள்ளது. இது புராபிட் புக்கிங் காரணத்தினால் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..
நிபுணர்கள் எதிர்பார்ப்பு
இது பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் எதிரொலியாக, பிட்காயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. அதோடு அமெரிக்காவில் 1.9 டிரில்லியன் டாலர்கள் கொரோனா ஊக்கத்தொகையானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. இதன் காரணமாக இன்னும் பிட்காயின் சந்தையில் வாங்குவது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
10% பிட்காயின் வீழ்ச்சி
எப்படி இருப்பினும் திங்கட்கிழமையன்று பிட்காயின் மதிப்பானது 10% வீழ்ச்சி கண்டு, 55,391.8 டாலர்களாக குறைந்துள்ளது. இது அமெரிக்க பத்திர லாபமும் அதிகரித்து வரும் நிலையில், இந்த டிஜிட்டல் சொத்தின் மதிப்பும் குறைந்துள்ளது. கடந்த மாதம் அதன் புதிய உச்சமான 58,000 டாலர்கலை தொட்ட பின்னர், 43,000 மீண்டும் தொட்டது.
இந்தியாவில் தடையா?
இதற்கிடையில் சர்வதேச முதலீட்டாளர்களை போலவே இந்திய முதலீட்டாளர்களுக்கும், கிரிப்டோகரன்சி சந்தையில் ஆர்வமாக இருந்தாலும், மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்திய அரசின் திட்டம் என்ன?
கடந்த ஜனவரி மாதத்திலேயே மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான முறையில் ரூபாய் மதிப்பிலான, கிரிப்டோகரன்சியை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. உண்மையில் இது வரவேற்கதக்க விஷயம் தான். ஏனெனில் இந்தளவுக்கு ஏற்ற இறக்கம் உள்ள சந்தையில், சிறு முதலீட்டாளர்கள் காணமல் போகவே வாய்ப்புகள் அதிகம். ஆக அரசே ஒரு டிஜிட்டல் நாணயத்தினை கொண்டு வந்தால், அது பாதுகாப்பானதாகவும், வரவேற்க வேண்டிய விஷயமும் கூட.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications