இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் பிட்காயின் (Bitcoin) என்பது மிகவும் பிரபலமானதாக உள்ளது. இது ஒரு வகையான கிரிப்டோகரன்சி (Cryptocurrency) ஆகும். அதாவது, இது கணினி உலகில் மட்டுமே இருக்கும் நாணயம். ஆன்லைனில் விலைமதிப்புள்ள விஷயங்களை வாங்கவோ அல்லது விற்கவோ இந்த பிட்காயின் பயன்படுகிறது. ஆனால், இது காகித நாணயம் அல்ல. இது ஒரு டிஜிட்டல் பணமாகும். இதை எந்த அரசாங்கமும், வங்கியும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் பண பரிமாற்றம் சுலபமாக நடைபெறும்.
ஆனால், பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கியவர் யார் என்பது உலகை ஆச்சரியப்படுத்தும் மர்மமாகவே உள்ளது. பிட்காயின் உருவாக்கியவர் "சதோசி நகமோட்டோ" என்ற பெயரில் கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் பிட்காயின் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இப்போது அந்த நபர் அல்லது குழு தான், உலகின் 11-வது மிகப்பெரிய சொத்து உள்ளவராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அர்காம் நிறுவனத்தின் தகவலின் படி, நகமோட்டோவின் பிட்காயின் சொத்துக்கள் 1.096 மில்லியன் BTC என மதிப்பிடப்படுகின்றன. இவற்றின் தற்போதைய மதிப்பு 128.92 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

இருப்பினும், பிட்காயினை உருவாக்கிய சதோஷி நகமோட்டோ யார் என்பது இன்றும் பெரிய மர்மமாகவே உள்ளது. இதற்கு பலரும் பெயர்கள் முன்வைத்துள்ளனர். ஹால் ஃபின்னி, நிக் ஸசாபோ போன்ற கிரிப்டோ நுண்ணறிவு விஞ்ஞானிகளும், எலான் மஸ்க், ஜாக் டோர்ஸி போன்ற பிரபலங்களும் கூட இந்த பிட்காயின் உருவாக்கத்தில் இருந்ததாக கூறப்பட்டாலும், யாரும் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆஸ்திரேலிய கணினி விஞ்ஞானி கிரேக் ரைட், "நான் தான் சதோஷி நகமோட்டோ" என்று பல முறை அறிவித்தார். ஆனால், 2024ஆம் ஆண்டு இங்கிலாந்து உயர்நீதிமன்றம் அவரின் கூற்றுகளை பொய் என கண்டுபிடித்தது. பின்னர், அவரை சட்ட ரீதியாக தண்டித்தது. மேலும், அவர் பிட்காயின் உருவாக்குனர் என்று கூறுவது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. இதனால், பிட்காயின் உருவாக்குனரின் உண்மையான பெயர் இன்னும் தெரியவில்லை.
பலர் இதைப் பற்றி ஆராய்ந்து பல இடங்களில் இணையத்தில், செய்திகள் மற்றும் ஆவணப்படங்களில் இந்த மர்மத்தை வெளிக்கொண்டு வர முயன்றாலும், சதோஷி யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டு "Money Electric: The Bitcoin Mystery" என்ற ஆவணப்படத்தில், இயக்குநர் கல்லன் ஹோபாக், பிட்காயின் உருவாக்குனர் என்று சிலர் சந்தேகிக்கப்படும் பீட்டர் கே. டாட் என்ற நபரை நேரில் சந்தித்தார். அவர் நகமோட்டோ அல்ல என்று தெளிவாக கூறினார்.
சதோஷி நகமோட்டோ கடந்த 2011ஆம் ஆண்டு வரை இணையத்தில் செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் இணையக் குழுக்களில் பேசிக்கொண்டிருந்தார். அதன் பின்னர், திடீரென அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது. அமெரிக்க ஊடகவியலாளர் பெஞ்சமின் வாலஸ் எழுதிய "The Mysterious Mr. Nakamoto" என்ற புத்தகத்தில், நகமோட்டோ ஒரு மறைந்துபோன நபராக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்ற அளவுக்கு அவர் மர்மம் ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் பிட்காயின் உலகின் ஒன்பதாவது பெரிய மதிப்புள்ள சொத்தாக வளர்ந்தது. இது டெஸ்லா நிறுவனத்துக்கு கீழ், மெட்டா நிறுவனத்தை விட மேலே நிலைத்து, உலக அளவில் பெரிய வர்த்தக வரவேற்பைப் பெற்றது. இந்த மர்மமான நபருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஹங்கேரியின் புடாப்பெஸ்ட் நகரில் உள்ள Graphisoft Park-இல், சதோஷி நகமோட்டோவுக்காக ஒரு வெண்கல சிலை அமைக்கப்பட்டது. அவர் முகம் உலகம் முழுக்க எவரும் காணாத ஒருவர் என்பதற்காக, அந்த சிலையின் முகம் பொதுவான மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்டது.
இந்த உருவம் ஒரு சாதாரண மனித உருவத்தை போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் முகம் பளபளப்பான வெண்கலம் மற்றும் அலுமினியம் கலவையில் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை சிற்பக் கலைஞர்கள் ஜெர்கெலி ரேகா மற்றும் தமாஷ் கில்லி இணைந்து உருவாக்கியுள்ளனர்.
பிட்காயின் உருவாக்கம், டிஜிட்டல் நிதி உலகை புரட்டிப் போட்டது. இது உலகிற்கு பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. "கிரிப்டோகரன்சி" எனும் புதிய சொத்துப் பிரிவை உருவாக்கி விட்டது. இன்று, நகமோட்டோவின் சொத்து மதிப்பு 128.92 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. பிட்காயின் மதிப்பு மேலோங்கும் வேகத்தில், அந்த செல்வமும் தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆனால், மக்களை ஈர்ப்பது செல்வம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் உள்ள அந்த மர்ம நாயகன் தான். யாரும் பார்த்திராத, பேசாத, ஆனால் உலக நிதி வரலாற்றையே மாற்றிய அந்த நபர். நகமோட்டோ ஒரு தனிப்பட்ட நபரா..? அல்லது குழுவா..? என்பது மர்மமாகவே உள்ள நிலையில், அவரால் தொடங்கப்பட்ட மாற்றம் மட்டும் நிச்சயமாக நிலைத்திருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications