உலகளவில் கிரிப்டோகரன்சிக்கு அரசுகள் எந்த அளவிற்கு எதிர்கிறதோ அதே அளவிற்குப் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் டெக் தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனாலேயே முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் மற்றும் டிவிட்டர் நிறுவனத்தின் ஜாக் டோர்சி ஆகியோர் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி குறித்து வெளியிட்ட சில முக்கியமான அறிவிப்புகள் மற்றும் கருத்துக்கள் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பிட்காயின் விலை
இதன் வாயிலாகப் பிட்காயின் கடந்த 2 நாட்களில் 12.5 சதவீதம் வரையில் அதிகரித்து 39,850 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இது கிட்டதட்ட 6 வார உயர்வு என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
எதிரியம் விலை
இதுமட்டும் அல்லாமல் பிட்காயினுக்குப் போட்டியாக எதிரியம் 2,344 டாலர் வரையில் உயர்ந்து 3 வார உயர்வைப் பதிவு செய்துள்ளது. கடந்த 3 மாதத்தில் கிரிப்டோகரன்சி சந்தையில் சிறப்பான வர்த்தகம் இதுதான்.
கிரிப்டோகரன்சி விலை
இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 11.03 சதவீதம் அதிகரித்து 38,263.34 டாலரை அடைந்துள்ளது. இதேபோல் எதிரியம் 6.97% உயர்வில் 2,321.83 டாலருக்கும், ரிப்பிள் 8.66% உயர்வில் 0.6598 டாலருக்கும், டோஜ்காயின் 13.20 சதவீத உயர்வில் 0.224 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
டெஸ்லா எலான் மஸ்க்
கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், பிட்காயின் உற்பத்திக்காகப் பயன்படுத்தும் பசுமை மின்சார அளவு அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் டெஸ்லா நிறுவனத்தின் பிட்காயினைப் பேமெண்ட் சேவை கொண்டு வர வாய்ப்பு உள்ளது. மே மாதம் இந்தச் சேவையை நிறுத்தினார் எலான் மஸ்க்.
டிவிட்டர் ஜாக் டோர்சி
இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான டிவிட்டர்-ன் நிறுவனர் மற்றும் தலைவருமான ஜாக் டோர்சி டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய பங்கு வகிக்கும் எனத் தெரிவித்தார்.
அமேசான் பேமெண்ட்
இதேபோல் உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது பேமெண்ட் தளத்தில் விரைவில் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் இந்த வருடத்தின் இறுதிக்குள் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வார பிட்காயின் வளர்ச்சி
கடந்த ஒரு வாரத்தில் பிட்காயின் மதிப்பு 29,691 ரூபாயில் இருந்து 39,544 டாலர் வரையில் அதிகரித்துள்ளது கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது. அதேபோல் இந்த வளர்ச்சி அதிகளவிலான கிரிப்டோ விற்பனை செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications