மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அறிவித்தது, இதனைத் தொடர்ந்து பிட்காயின் மதிப்பு கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் உள்ளது.
இன்றைய கிரிப்டோகரன்சி சந்தை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 9 சதவீதம் வரையில் உயர்ந்து 38000 டாலரை தாண்டியுள்ளது. இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
சீனாவின் தடை உத்தரவும், டெஸ்லா மற்றும் எலான் மஸ்க் பிட்காயின் மீதான நிலைப்பாடு ஆகியவற்றை மூலம் பிட்காயின் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது.

இந்நிலையில் எல் சல்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele பிட்காயினை நாணயமாகப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் நேற்று எல் சல்வடோர் நாட்டின் நாடாளுமன்றத்தில் சுமார் 84 உறுப்பினர்களில் 62 பேர் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் எளிதாக ஒப்புதல் பெற்றுள்ளது.
எல் சல்வடோர் நாட்டில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 1 கோடி வாடிக்கையாளர்கள் பிட்காயின் வர்த்தகச் சந்தைக்குள்ள நுழைந்துள்ளனர் என்றும் அதிபர் Nayib Bukele தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிட்காயின் தயாரிப்பிலும் இறங்க உள்ளதாக அறிவித்துள்ள எல் சல்வடோர் நாட்டின் அரசு, இதன் உற்பத்திக்கு எரிமலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் குறுகிய காலத்தில் மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையிலும் பிட்காயின் வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications