பிட்காயின் முதலீடு என்பது பரவலாக உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது.
காயினை அடிப்படையாகக் கொண்ட ஐபிஓ அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்படும் நிலையில், பிட்காயின் மதிப்பானது மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் தற்போது 63,962 டாலர்களை தொட்டு மீண்டும் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றது.
தொடர்ந்து அமெரிக்க முதலீட்டாளர்கள் பிட்காயினில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதன் மதிப்பானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. பிட்காயின் குறித்து எதிர்மறையான கருத்துகள் என்பது நிலவி வந்தாலும், டெஸ்லா உள்ளிட்ட மிகப்பெரிய மிகப்பெரிய நிறுவனங்கள் கூட இந்த டிஜிட்டல் நாணயத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக நாளுக்கு நாள் பல நிறுவனங்களும், பிட்காயினை தங்களது பேமெண்ட் ஆப்சனாகவும் ஏற்றும் கொள்ள ஆரம்பித்துள்ளன.
இதற்கிடையில் ஏப்ரல் 14 அன்று நாஸ்டாக்கில் 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், காயின்பேஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையில் மார்கன் ஸ்டான்லி, கோல்டுமேன் சாச்சஸ் உள்ளிட்ட முதலீட்டு வங்கிகளும் கூட, பிட்காயினுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஆக பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருவதில் ஆச்சரியமில்லை என்றாலும், தொடர்ந்து பல நாடுகளில் அதிகரித்து வரும் ஆதரவுக்கு மத்தியில் இதன் மதிப்பானது இன்னும் அதிகரிக்கும் என்றே முதலீட்டாளர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது தொடர்ந்து குறைவான வட்டி விகிதமானது இன்னும் சில ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும் என்றும் கூறி வருகின்றது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங் ஆகவும் பிட்காயின் மாறி வருகின்றது. இதனால் முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.