இன்று உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்தாலும், மறுபுறம் அதனை கண்டுகொள்ளமல் சத்தேமேயில்லாமல் சில கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வந்தது.
அதிலும் இன்று உலகம் முழுவதும் மிக பரவலாக பேசப்படும் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் ஒன்று பிட்காயின். இது சர்வதேச சந்தையில் பலராலும் விரும்பப்படும் ஓரு முதலீடாக மாறி வருகிறது.
அதுவும் அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரானிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் வருகைக்கு பின்னர, பிட்காயின் மதிப்பானது இன்னும் சற்று கூடுதலாகவே இருந்து வந்தது.
கடும் சரிவு
இதற்கிடையில் தான் சமீபத்தில் பிட்காயின் மதிப்பானது அதன் வரலாற்று உச்சத்தினை தொட்டது. இன்று சர்வதேச அளவில் பெரியளவில் பேசப்படும் முதலீடுகளில் ஒன்றான பிட்காயின், இன்று காலை நேரத்தில் 17% மேலாக சரிந்து காணப்பட்டது. இருப்பினும் தற்போது 11.36% சரிந்து 50,110.82 டாலராக காணப்படுகிறது.
காரணம் என்ன?
உலகின் மிகப்பெரிய கிரிப்ரோகரன்சியானது இன்று காலையில் 54,819 டாலர்களில் இருந்து, இரண்டே மணி நேரத்தில் சுமார் 45,700 டாலர் என்ற லெவல் வரை சரிந்தது. இது கடந்த மார்ச் 1-க்கு பிறகு மிக மோசமான சரிவாகும். எனினும் அதன் பின்னர் ஆசிய சந்தையின் தொடக்கத்தில் இது சற்று மீண்டும் கண்டது.
பேமெண்டாக ஏற்றுக் கொள்ள முடியாது
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், முன்னதாக தங்களது வாகன நிறுவனத்தில், பிட்காயினை பேமெண்டாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தார். ஆனால் இன்று காலையில் எலான் மஸ்க் தனது வாகனங்களை வாங்குவதற்கு பிட்காயினை ஏற்கொள்வதை நிறுத்துவதாக ,ட்வீட் செய்தததையடுத்து கடும் சரிவினைக் கண்டது.
முதலீட்டினை எடுக்கவில்லை
இந்த ஆண்டு தொடக்கத்தில் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதன் பிறகு எலான் மஸ்க் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிட்காயின் பற்றி ட்வீட் செய்தும் வந்தார். எனினும் தான் பிட்காயினில் முதலீடு செய்தததை விற்பனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.