தமிழ்நாடு மற்றும் கேரளா-வில் கால் பதிக்கக் கடுமையாக முயற்சித்து வரும் பாஜக, லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவின் இரு மாநிலங்களிலும் எவ்வளவு இடங்களைக் கைப்பற்றும் என பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.
பிரபல பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான சுர்ஜித் பல்லா தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார கொள்கை வடிவமைப்பில் ஈடுபட்டவர். இதேபோல் IMF அமைப்பின் இந்தியப் பிரிவின் தலைவராக இருந்தவர் சுர்ஜித் பல்லா. ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடந்து வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 2019 தேர்தல் செயல்திறனை விஞ்சிவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாக சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சுர்ஜித் பல்லா 'ஹவ் வி வோட்' என்ற தனது புதிய புத்தகத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களின் மனநிலையை விவரித்து எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி நடந்து வரும் பொதுத் தேர்தலில் 330 முதல் 350 இடங்கள் வரை வெற்றிபெற முடியும் எனக் கூறியுள்ளார் பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான சுர்ஜித் பல்லா.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 303 உட்பட 353 இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றி அரியணையில் ஏறியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
"புள்ளிவிவர சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், பிஜேபி சொந்தமாக 330 முதல் 350 இடங்களைப் பெற வேண்டும். இது பாஜக மட்டுமே, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்க்கவில்லை" என்று சுர்ஜித் பல்லா கூறியதாக NDTV தெரிவித்துள்ளது.
2019 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில், பாஜக வெற்றி பெற்ற இடங்கள் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். சுர்ஜித் பல்லாவின் கூற்றுப்படி, காங்கிரஸ் 44 இடங்களைப் பெறலாம் அல்லது 2014 தேர்தலில் வென்றதை விட 2 சதவீதம் குறைவாகப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா: பாரதிய ஜனதா கட்சி பலவீனமான கட்சியாக இருக்கும் தமிழகத்தில் பாஜக குறைந்தது ஐந்து இடங்களையாவது வெல்லக்கூடும் என்றும் சுர்ஜித் பல்லா கணித்துள்ளார். "தமிழகத்தில் பாஜக ஐந்து இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கேரளாவில் ஒன்று அல்லது இரண்டாக இருக்கலாம்" என்று சுர்ஜித் பல்லா கூறியுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications