இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ன் ஹைதராபாத் அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, இந்த அலுவலகத்தில் இருந்த சுமார் 1500 ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஹைதராபாத் நகரின் முக்கிய பகுதியான கோண்டாபூர் பகுதியில் அமைந்துள்ள நாட்டின் உயர்மட்ட ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது, ஊழியர்களை அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த போன் கால் செய்தது யார் என்பதில் தான் பெரிய டிவிஸ்டே உள்ளது.

வியாழக்கிழமை காலை 11 மணியளவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கோண்டாப்பூர் அலுவலகத்தின் பாதுகாப்புக் குழுவிற்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த அழைப்பு வந்தது. போனில் அழைத்தவர் கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதை அடுத்த பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து ஊழியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்த உடனேயே டிசிஎஸ் அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கூறிய நிலையில் பாதுகாப்பு பணிகளை சில நிமிடத்தில் வேகப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஹைதராபாத் கோண்டாபூர் அலுவலகத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வளாகத்தில் இருந்தது தெரிய வந்தது.
டிசிஎஸ் அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கூறிய நிலையில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்து ஒட்டுமொத்த அலுவலகத்தையும் சோதனை செய்த பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தினார்.

மேலும் வெடிகுண்டு மிரட்டல் விட்டுத்து போன் கால் செய்தவர் டிசிஎஸ் நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் ஊழியர் என அடையாளம் காணப்பட்டது. இதற்கு மத்தியில் மிரட்டல் விடுத்தவர் மீண்டும் அதே பாதுகாப்பு அலுவலகத்திற்கு போன்கால் செய்து இது பொய்யான தகவல் என்று கூறினார். ஆனாலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் முழு டிசிஎஸ் வளாகத்தையும் ஆய்வு செய்து வெடிகுண்டு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை உறுதி செய்தனர்.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விட்டுத்தவர் டிசிஎஸ் நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் ஊழியர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் இவர் பெங்களூரில் இருந்து அழைத்தது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அந்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications