டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவது என ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப் படியில் 2 சதவீதம் உயர்த்தி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 48.6 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் ,66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள். மத்திய அரசு ஊழியர்கள் இதுநாள் வரை தங்களின் அடிப்படை சம்பளத்தில் 53 சதவீதம் தொகையை அகவிலைப்படியாக பெற்றனர். அது 55 சதவீதமாக உயர்கிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் உயரும்.

ஏழாவது சம்பள கமிஷன் வெளியிட்ட பரிந்துரை மற்றும் ஃபார்முலாக்களின் அடிப்படையில் தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 50 லிருந்து 53 சதவீதமாக மாறியது. மத்திய அரசு பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.
ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனால் நிர்ணயம் செய்யப்படுகிறது, இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வதை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை அரசு வெளியிடுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும். கடந்த ஜூலைக்கு பிறகு அகவிலைப்படி தொடர்பான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. ஜனவரியிலேயே வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் தற்போது தான் அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஏப்ரல் மாத சம்பளத்தோடு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அரியர் தொகையும் சேர்த்து ஊழியர்களுக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வினால் மத்திய அரசில் நுழைவு நிலையில் இருக்கக்கூடிய அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக இருக்கும் ஊழியர்களுக்கு மாதம் தோறும் 360 ரூபாய் சம்பளத்தில் சேர்த்து கிடைக்கும்.
அதாவது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொண்ட ஒரு நபரின் அடிப்படை சம்பளம் அதில் 18, 000 என்றால் அவருக்கு தற்போது 9540 ரூபாய் அகவிலைப் படியாக வழங்கப்படுகிறது. இதில் தற்போது இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதால் இனி 9,900 ரூபாயாக அகவிலைப்படி கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications