இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி, நிர்வாகம், கொள்கை, அரசியல், வர்த்தகம் என அனைத்தையும் தீர்மானிக்கப்போவது ஜென்Z தலைமுறையினர் தான் ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் விரிவாக செய்தியை வெளியிட்ட நிலையில் இந்திய கார்ப்ரேட் துறையில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் பறந்துவிரிந்திருக்கும் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் + ஜென்Z தலைமுறையின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திய தொழிற்துறையில் ஜென்Z-க்களின் பங்கை அதிகரிக்க நாடாளுமன்ற குழு புதிய பரிந்துரையை வைத்துள்ளது.

இப்புதிய பரிந்துரையின் படி இந்திய நிறுவனங்களில் மேனேஜிங் டைரக்டர் மற்றும் முழுநேர டைரக்டர் பதவிகளில் இருப்போரின் வயதை 21ல் இருந்து 18 ஆக குறைக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.
தற்போது பெரும்பாலான நிறுவனத்தின் நிர்வாக குழுவில் பூமர்ஸ் அதாவது 1946-1964 அதாவது 60 முதல் 80 வயதில் இருப்பவர்கள் தான் டைரக்டராக உள்ளனர். இவர்களின் இடத்தை தான் தற்போது ஜென்Z தலைமுறையினர் பெற உள்ளனர்.
உலகில் பெரும்பாலான நாடுகள் இத்தகைய வயது வரம்பை விதிப்பது கிடையாது, இதேபோல இந்தியாவிலும் 18 வயதான ஒரு நபர் நிறுவனத்தை துவங்கி, பங்குகளை வைத்துக்கொள்ளவும், நிர்வாக குழுவில் அமரவும், வர்த்தகத்தை நடத்தவும் முழு அதிகாரத்தை கொடுக்கும் வகையில் இந்த சட்ட சீர்திருத்தம் வர உள்ளது.
நாடாளுமன்ற குழு இனி வரும் காலத்திற்கு ஏற்றார் போல் கொள்கை அளவில், கார்ப்ரேட் நிர்வாகத்திலும் இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகம் வர வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் குரல் அதிகம் வர்த்தக சந்தையில் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.
மத்திய அரசு ஏற்கனவே நிர்வாக குழுவில் பெண்கள் இணைப்புக்கான கொள்கை கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் நீட்சியாக இளம் தலைமுறையினர் நிர்வாக குழுவில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை விரைவில் பெற உள்ளனர்.
தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வெறும் 15 பேர் டைரக்டர்கள் மட்டுமே 25 வயதுக்கும் குறைந்தவர்களாக உள்ளனர், மற்றவர்கள் அனைவரும் 25க்கும் அதிகமானவர்கள் மட்டுமே. இதேபோல் 10 வருடத்தில் NSE பட்டியலிடப்பட்ட 40 நிறுவனங்களில் 687 டைரெக்டர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 1700க்கும் அதிகமாகியுள்ளது.
இதன் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்கள் பலதரப்பட்ட மக்களை தனது நிர்வாக குழுவில் சேர்ப்பது உறுதியானது. இதேவேளையில் அடுத்த தலைமுறையினர், ஜென்Z தலைமுறையினருக்காக வர்த்தகம் செய்ய திட்டமிடும் கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களுடைய நிர்வாக குழுவில் இளம் தலைமுறையினரை சேர்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications

