ஜெர்மனை சேர்ந்த டெக்னாலஜி மற்றும் சேவை நிறுவனமான போஷ் குழுமம், அதன் பெங்களுரில் தற்போதுள்ள வளாகத்தை முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AIoT) மையமாக மேம்படுத்த 800 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த வளாகத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை போஷ் கொண்டுள்ளதாக அதன் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளது. இது உலகிலேயே இரண்டாவது இடம் இருக்கலாம் என்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சோமித்திரா பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

75 ஏக்கர் வளாகத்தில், இந்தியாவில் உள்ள இந்த குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் தளமாக உள்ளது. குறிப்பாக இதில் வீட்டு உபகரணங்கள், பவர் டூல்கள், பவர் ட்ரெயின்கள் மற்றும் ஆட்டோமோட்டிவ் பிரிவுகள் உள்ளன.
போஷ்ஷின் இந்த நடவடிக்கைக்கு பிறகு 10,000 சாப்ட்வேர் இன்ஜினியர்களை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விரிவுபடுத்தலானது ஜூன் 202க்குள் முடிவடைந்து தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் இது உலகின் சிறந்த டெக் செண்டர்களில் ஒன்றாக இருக்கும். அதாவது ஐரோப்பா போல இருக்கும். இது இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் போஷ் ஆலையாகும். தற்போது இந்த ஆலையில் 3000 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்ளனர். இந்த விரிவுபடுத்தல் முடிந்தவுடன் இதனை 10,000 பேராக உயர்த்தலாம் என்றும் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
போஷ் கடந்த 1951ல் கர் நாடகவுக்கு வந்தது. 1953 முதல் இந்தியாவிலேயே தயாரிப்பினை செய்து வருகிறோம். ஆக இந்த வளாகம் ஏற்கனவே 68 ஆண்டுகளாக உள்ளது.
போஷ் தற்போது இந்தியாவில் மொத்தம் 31,150 கூட்டாளர்களை கொண்டுள்ளது. இதில் 15 குழு நிறுவனங்கள் மற்றும் 16 உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. உலகளவில் இந்த குழுவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 73,000 பேர் மேம்பாட்டு பொறியாளர்கள் உள்ளனர்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications