கிடு கிடு ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை.. 9 மாதங்களுக்கு பிறகு $50 தொட்ட விலை.. என்ன காரணம்..!

கனவில் கூட நினைத்திருப்போமா என்று தெரியவில்லை, கச்சா எண்ணெய் விலை மைனஸில் செல்லும் என்று. ஆனால் அந்தளவுக்கு கடந்த ஏப்ரலில் சரிவினைக் கண்டது. ஆனால் இறங்கிய அதே வேகதத்தில் தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளது.

உலகளவில் பரவி வரும் கொரோனாவினால் நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று தான் கச்சா எண்ணெய் விலை சரிவு. ஆனால் அந்த சந்தோஷமும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சரிவிலேயே இருந்த கச்சா எண்ணெய் விலையானது, தற்போது பேரலுக்கு மீண்டும் 50 டாலர்களை நெருங்கி விட்டது.

பெரும் சவால்

பெரும் சவால்

கச்சா எண்ணெய் விலை சரிவு இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு இது பெரும் சவாலாக இருந்தது. அந்த சமயத்தில் பல எண்ணெய் நிறுவனங்கள் திவால் நிலைக்கே கூட சென்றன. ஏனெனில் தங்களின் முழு நேர வர்த்தகமும், முழு வருமான ஆதாரமாகவும் உள்ள எண்ணெய் விற்பனையில் துண்டு விழும்போது பிரச்சனை ஏற்படத்தானே செய்யும்.

தேவை சரிவு

தேவை சரிவு

கடந்த பல மாதங்களாகவே கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் வைரஸினால், உலக நாடுகள் ஸ்தம்பித்து போயிருந்தன. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத வண்ணம் பல முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிறுவனங்கள் முடங்கி போயின. வாகனங்கள் ஓடவில்லை. பேருந்துகள் இயங்கவில்லை, ரயில்கள், விமான சேவைகள் என அனைத்து போக்குவரத்துகளும் முடங்கின. மொத்தத்தில் அத்தியாவசியம் தவிர, மற்றவை எல்லாம் பல மாதங்கள் முடங்கின. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையும் முடங்கியது.

லாக்டவுன் தளர்வுகள்

லாக்டவுன் தளர்வுகள்

எனினும் தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலைகள் வழக்கம் போல இயங்கத் தொடங்கியுள்ளன. வாகனங்களும் இயங்கி வருகின்றன. விமானங்கள் கூட பறக்க தொடங்கி விட்டன. இதன் காரணமாக தற்போது கச்சா எண்ணெய் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை தற்போது 0.47%% வீழ்ச்சி கண்டு, பேரலுக்கு 46.58 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்று அதிகபட்சமாக 47.74 டாலர்கள் வரை தொட்டுள்ளது. இன்றும் சற்று ஏற்றத்தினை காணும் விதமாகவே காணப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் -40.32 டாலர்கள் வரை சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 0.50% வீழ்ச்சி கண்டு 50 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் கிட்டதட்ட 15 டாலர்கள் வரை சென்று திரும்பியது.

கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணம்

கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணம்

கச்சா எண்ணெயின் இந்த விலை ஏற்றத்திற்கு கொரோனா தடுப்பூசி பற்றிய அறிவிப்புகளும் ஒரு காரணம். ஏனெனில் தடுப்பூசியானது அமலுக்கு வரும் பட்சத்தில், துவண்டு போன பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதனால் கச்சா எண்ணெய் தேவையானது அதிகரிக்கும் என்ற எண்ணமும் முதலீட்டாளர்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உற்பத்தியை குறைக்கலாம்

உற்பத்தியை குறைக்கலாம்

தற்போதே கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 50 டாலர்களை தொட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதனால் இன்னும் விலை அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தேவை அதிகரிக்கும் பட்சத்தில் உற்பத்தில் குறைந்தால் அது இன்னும் விலை அதிகரிக்கவே காரணமாக அமையும்.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

கச்சா எண்ணெய் அதிகரிக்கும்பட்சத்தில் பெட் ரோல் டீசல் விலை என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. ஏனெனில் இந்தியா கச்சா எண்ணெய்க்காக அதிகளவு இறக்குமதியினை மட்டுமே நம்பியுள்ளது. இதன் காரணமாக விலை அதிகரிப்பு என்பது இந்தியாவினை அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தும். இப்போதே பெட்ரோல் விலை சுமார் 87 ரூபாயினை தொட்டுள்ள நிலையில், இனி வரும் காலங்களில் என்ன ஆகுமோ?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+