லண்டன்: பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பிரிட்டனில் வந்து வேலை செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் தகவல் தொழில்நுட்பம், டெலிகாம் மற்றும் பொறியியல் நிறுவனங்களில் பெரும்பாலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டன் அரசு தங்களுடைய விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்தியாவை சேர்ந்த தொழில் நிபுணர்கள் பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குறைந்தபட்ச வருமான வரம்பை அதிகரிப்பது அல்லது பிராந்திய அடிப்படையில் வருமான வரம்புகளை மாற்றுவது என்பன உள்ளிட்ட புதிய விசா நடைமுறைகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. பிரிட்டனின் உள்துறை செயலாளர் பெட்டே கூப்பர் இது தொடர்பாக பிரிட்டனின் குடியுரிமை ஆலோசனை கமிட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இதில் பிரிட்டனை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் டெலி கம்யூனிகேஷன் நிறுவனங்கள் வெளிநாட்டு நிபுணர்களை சார்ந்து இருப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டுள்ளாராம்.
பிரிட்டனில் குறிப்பிட்ட துறை சார்ந்த பணிகளுக்கு பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என பிரிட்டன் உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.
பிரிட்டனை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு என்னென்ன திறன்களில் குறைபாடு இருக்கிறது. அதனை எப்படி சரி செய்வது, பிரிட்டன் வேலைவாய்ப்பு சந்தையை எப்படி வலுவாக்குவது என்பது குறித்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பிரிட்டனில் வந்து பணியாற்றி நமது பொருளாதாரத்திற்கு உதவி செய்கிறது அவர்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் இந்த அமைப்பு முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டியது தற்போது அவசியமாகியுள்ளது என உள்துறை செயலாளர் கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. இந்த அறிக்கை அடிப்படையில் பிரிட்டன் அரசு விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது.
இதனிடையே கேர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பிரிட்டன் நாட்டவர்கள் மற்றும் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்தவர்கள் தங்களது குடும்பத்தினரை இங்கே கொண்டு வருவதற்கு அவர்களுக்கு குறைந்தபட்ச வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மாற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு ஒரு நபர் பிரிட்டனில் குடும்பத்தினருடன் குடியேற வேண்டுமெனில் அவர்களின் ஆண்டு வருமானம் சுமார் 32 லட்சமாக இருக்க வேண்டும். இது உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications