பிரிட்டானியா CEO ராஜ்னீத் கோஹ்லி திடீர் ராஜினாமா..! பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நிலை என்ன..?

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பது பிஸ்கட் , ரொட்டி மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு இந்திய பன்னாட்டு உணவுப் பொருட்கள் நிறுவனமாகும் . 1892 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது, இந்தியாவின் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும் தற்போது நுஸ்லி வாடியா தலைமையிலான வாடியா குழுமத்தின் ஒரு பகுதியாகும் . 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, அதன் வருவாயில் சுமார் 80% பிஸ்கட் பொருட்களிலிருந்து வந்தது.

இத்தகைய, இந்தியாவின் முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ராஜ்னீத் சிங் கோஹ்லி தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் மார்ச் 14, 2025 அன்று வணிக நேரம் முடிந்தவுடன் தனது பணிகளை நிறைவு செய்து நிறுவனத்திலிருந்து வெளியேறுவார். அவரின் ராஜினாமா அறிவிப்பு நிறுவனத்திற்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

பிரிட்டானியா CEO ராஜ்னீத் கோஹ்லி திடீர் ராஜினாமா..! பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நிலை என்ன..?

பிரிட்டானியா நிறுவனம் மார்ச் 6, 2025 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "திரு. ராஜ்னீத் சிங் கோஹ்லி தனது பதவியிலிருந்து மார்ச் 14 முதல் விலகுவதாகவும், அவர் நிறுவனத்திற்கு வெளியே ஒரு புதிய வாய்ப்பைப் பெறுவதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும்" கூறியுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும் அவரது ராஜினாமாவை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது.

ராஜ்னீத் கோஹ்லி செப்டம்பர் 2022-ஆம் ஆண்டு பிரிட்டானியா நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார். அவர் முன்பு ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், ஆசிய பெயிண்ட்ஸ், மற்றும் கோகோ கோலா ஆகிய உலகளாவிய நிறுவனங்களில் தலைமைப் பதவிகளை வகித்திருந்தார். குறிப்பாக, டோமினோஸ் இந்தியாவில் அவர் முக்கிய பொறுப்புகளை மேற்கொண்டு நிறுவன வளர்ச்சிக்கு பங்களித்துள்ளார்.

ராஜ்னீத் கோஹ்லி பிரிட்டானியா நிறுவனத்தின் கோவிட்-19 பிந்தைய வளர்ச்சி மற்றும் விற்பனை மேம்பாட்டு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தார். உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் கிராமப்புற சந்தையில் மீண்டும் கோலோச்சிய தேவை ஆகியவற்றால், நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டு லாபக் கணிப்புகளை மீறியதாக பிப்ரவரி 2025-ல் அறிவித்தது.

பிரிட்டானியா நிறுவனம் இந்தியாவில் பிஸ்கட் மற்றும் பேக்கரி தயாரிப்புகளில் முன்னணி நிறுவனம் ஆக திகழ்கிறது. அதன் பிரபலமான பிராண்டுகளாக குட் டே, டைகர், மரி கோல்ட், 50-50, மற்றும் லிட்டில் டீபோ போன்றவை குறிப்பிடத்தக்கவை. தற்போது, இந்திய உணவு மற்றும் நுகர்வோர் பொருள் சந்தையில் பல புதிய போட்டியாளர்கள் உள்ள நிலையில், பிரிட்டானியா தனது வளர்ச்சியை தொடர்வதற்காக புதிய தீர்வுகளை தேடி வருகிறது. இந்த நிலையில், கோஹ்லியின் ராஜினாமா நிறுவனம் எதிர்கொள்ளும் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது

ராஜ்னீத் கோஹ்லியின் பதவியை யார் பொறுப்பேற்கப் போகிறார் என்பது குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும், உலகளாவிய மற்றும் உள்ளூர் சந்தையில் அனுபவமுள்ள ஒருவரை தலைமைப் பதவிக்கு தேர்வு செய்ய திட்டமிடுவதாக தெரிகிறது. புதிய தலைமை நிர்வாகி யார் என்பதைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+