சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் நாட்டின் பிரபலமான வோடபோன் நிறுவனத்தின் சிஇஓ Margherita Della Valle அடுத்த 3 வருடத்தில் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த பணிநீக்கம் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டு ஊழியர்களை அதிகளவில் பாதிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டன் சந்தையில் இந்த அறிவிப்பின் அதிர்வலைகள் இன்னும் முடியாத நிலையில் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான BT குரூப் என அழைக்கப்படும் British telecomm, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 55000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது மட்டும் அல்லாமல், குறைந்தது 10000 பேரின் வேலைவாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவு மூலம் இப்பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பொதுவாக நிறுவனங்கள் பணிநீக்கம் செய்தாலும் வரும் காலத்தில் வர்த்தகம் விரிவாக்கம் அடையும் போது ஊழியர்களை சேர்ப்பது வழக்கம், ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் பல பணிகளை தொழில்நுட்பத்தின் மூலம் சரி செய்ய திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல் BT Group அறிவிப்பு அமைந்துள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
BT Group-இன் தலைமை நிர்வாக அதிகாரியான பிலிப் ஜான்சன் AI சந்தேகத்திற்கு இடமின்றி பெரிய அளவில் நமக்கு பயனளிக்கும் என இந்நிறுவன நிதிமுடிவுகளை வெளியிடும் போது முதலீட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளார். பிடி குரூப் நிறுவனத்தில் சுமார் 130,000 பேர் பணியாற்றுகின்றனர், இதில் 55000 பேரை 2030 ஆம் ஆண்டுக்குள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது BT Group.

ஏற்கனவே BT Group "Amy" என்ற AI சாட்போட் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்து, தேவையான தீர்வுகளை வழங்குகிறது. OpenAI இன் பிரபலமான ChatGPT போன்ற ஜெனரேட்டிவ் AI உடன் நிறுவனத்தின் தொடர்ச்சியான பரிசோதனைகள் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு வழிவகுக்கும் என்றும் BT Group-இன் தலைமை நிர்வாக அதிகாரியான பிலிப் ஜான்சன் கூறினார்.
இதேபோல் நிறுவனத்தில் பல சேவைகளை டிஜிட்டைஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார் BT Group-இன் தலைமை நிர்வாக அதிகாரியான பிலிப் ஜான்சன், இதன் மூலம் செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை அளிக்க முடியும். அதிலும் குறிப்பாக வாடிக்கையாளர் சேவை மட்டத்தில் AI CHATBOT பெரும் மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை கொண்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications