சாதிக்க இடமோ அல்லது பொருளோ தேவையில்லை என்பதை ஹரியானாவைச் சேர்ந்த இருவர் நிரூபித்து காட்டியுள்ளனர். நவீன் மற்றும் பிரவீன் சிந்து என்ற 2 சகோதரர்கள் இணைந்து தங்கள் வீட்டின் சிறிய அறையில் உலகில் மிகவும் விலை உயர்ந்த மசாலா பொருளான குங்குமப்பூவை வளர்த்து லட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் எப்படி இதை செய்கின்றனர் குங்குமப்பூ சாகுபடியில் எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
குங்குமப்பூ மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்று. ஆனால் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அழகு சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுவது முதல் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தருவது வரை பலவற்றுக்கும் குங்குமப்பூ பயன்படுகிறது. இதய ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், மனநிலை மேம்பாடு, வெயிட் லாஸ் போன்ற பலவற்றுக்கும் குங்குமப்பூ பயன்படுகிறது.

இதன் ஆரோக்கிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு எம்டெக் பட்டதாரியான பிரவீன் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த நவீன் இணைந்து பாரம்பரிய விவசாய முறைகளுக்கே சவால் விடும் வகையில் வெறும் 225 சதுர அடி அறையில் குங்குமப்பூவை வீட்டிற்குள் வளர்த்து புதுமையான முறையில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் முறையான பயிற்சி பெற்ற பிறகு காஷ்மீரில் இருந்து 100 கிலோ குங்குமப்பூ விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.250 கொடுத்து வாங்கி ரூ.13 லட்சம் முதலீட்டில் தங்கள் வீட்டின் மேல் கூரையில் ஒரு அதிநவீன ஆய்வகத்தை நிறுவியுள்ளனர்.
பொதுவாக குங்குமப்பூ வளர்ப்பதற்கு 10 டிகிரி முதல் 20 டிகிரி வரையிலான வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆனால் இந்த சகோதரர்கள் சூரிய ஒளியைத் தவிர்த்து LED விளக்குகளைப் பயன்படுத்தி விவசாயத்தை செய்துள்ளனர். மேலும் ஏரோபோனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு சில மாதங்களிலேயே 1.5 கிலோ குங்குமப்பூவை உற்பத்தி செய்துள்ளனர்.
உயர்தர ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ப்ரீமியம் குங்குமப் பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை இருக்கும். ஆனால் வயல்வெளியில் வளர்க்கப்படும் குங்குமப்பூவின் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தான் இருக்கும். எனவே இதை தெரிந்து கொண்டு ப்ரீமியம் குங்குமப்பூவை வளர்க்கும் யுக்திகளை இந்த 2 சகோதரர்களும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சகோதரர்கள் இணைந்து தங்களுடைய சொந்த ப்ராண்டான அமரத்வா அக்ரோ என்ற பிராண்டையும் நிறுவியுள்ளனர். உள்நாட்டிலும் குங்குமப்பூக்களை சப்ளை செய்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா, யூகே போன்ற சர்வதேச சந்தைகளுக்கும் தங்கள் பிரீமியம் குங்குமப்பூக்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
நவீன் மற்றும் பிரவீன் சிந்து இணைந்து சிறிய இடத்தை பயன்படுத்தி தங்களுடைய பெரிய கனவை நினைவாக்கியுள்ளனர். அவர்களுடைய புதுமையான அணுகுமுறை மற்றும் விடாமுயற்சி இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

டிரம்புடன் கைகோர்த்த அம்பானி!! ஈரான் போருக்கு மத்தியில் அமைந்த சர்ப்பிரைஸ் கூட்டணி!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications