எம்டிஎன்எல் எனப்படும் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரு மாத காலத்தில் சுமார் 120 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை சார்பில் இந்நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்டிஎன்எல் நிறுவன பங்குகளை பொறுத்தவரை தொடர்ந்து 11ஆவது நாளாக வளர்ச்சி பாதையிலேயே இருந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை அன்று மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 5 சதவீதம் உயர்வு கண்டு 97 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையில் லாக் ஆனது. இதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 119.74 சதவீதம் என இந்த பங்கின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இதனிடையே நிதி நெருக்கடியில் இருக்கும் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கு அரசு உடனடி பத்திர தொகையாக 5.1 பில்லியன் டாலர்களை வழங்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த செய்தி தொடர்பாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் எம்டிஎன்எல் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடுகளை எம்டிஎன்எல் நிறுவனத்திடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கு எம்டிஎன்எல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அண்மை காலமாக இந்த நிறுவன பங்குகள் வர்த்தகமாகும் அளவு கணிசமாக உயர்ந்து வருவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான எம்டிஎன்எல் 2024 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாக நிதி அறிக்கை வெளியிட்டது. இது முந்தைய ஆண்டை விட அதிகம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் நிறுவனத்திற்கு அதன் செயல்பாடுகளில் இருந்து கிடைத்த வருமானம் 5 சதவீதம் என குறைந்துள்ளது. இதனிடையே 2025-ஆம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வரும் 13ஆம் தேதி வெளியிட இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5284 கோடி ஆகும். இந்த பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 , இந்த நிறுவன பங்கில் 56 சதவீதம் புரமோட்டர்களிடம் இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் 29 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 19 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 97 ரூபாய். ஓராண்டு காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு 395 சதவீதம் லாபத்தை தந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications