பட்ஜெட் நாளில் பங்குச்சந்தை ஓப்பன்.. சன்டே லீவ் கிடையாது.. ரெடியாக இருங்க..!!

இந்திய பங்குச் சந்தைக்கு வரலாற்றில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வு நடக்கவுள்ளது. ஆம் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், BSE மற்றும் NSE ஆகிய இரு பங்குச் சந்தைகளும் அன்று வர்த்தகத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி இருந்தது, இதை மத்திய அரசு முடிவு செய்து அறிவித்த நிலையில், அடுத்த கேள்வியாக முதலீட்டு சந்தை திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது இதற்கும் விடை கிடைத்திருக்கும் வேளையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பட்ஜெட் நாள் வர்த்தகத்திற்கு தயாராகும் நேரம் வந்துவிட்டது.

பட்ஜெட் நாளில் பங்குச்சந்தை ஓப்பன்.. சன்டே லீவ் கிடையாது.. ரெடியாக இருங்க..!!

இரு பங்குச் சந்தை அமைப்புகளும் இன்று தனித்தனியாக வெளியிட்ட அறிக்கைகளில், பட்ஜெட் தினமான ஞாயிற்றுக்கிழமை பங்கு வர்த்தகம் நடைபெறும் என்று உறுதிப்படுத்தியுள்ளன. வர்த்தக நேரங்கள் வழக்கம்போலவே இருக்கும் எனவும் விளக்கியுள்ளது.

ஆதாவது காலை 9 மணி முதல் 9:08 மணி வரை ப்ரீ-ஓபன் சந்தை நடைபெறும். இயல்பான தினசரி வர்த்தகம் காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை தொடரும் என தெரிவித்துள்ளது.

மேலும் BSE சுற்றறிக்கையில், "T+0 செட்டில்மென்ட் மற்றும் செட்டில்மென்ட் டீபால்ட் ஏலம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1, 2026) நடைபெறாது" என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் பிப்ரவரி 1 ஆம் தேதி எஃப்ஆண்ட்ஓ (F&O) மற்றும் commodity derivatives ஆகியவையும் அன்று திறந்திருக்கும்.

பொதுவாக பங்குச் சந்தைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். சில பொது விடுமுறை நாட்களிலும் வர்த்தகம் நிறுத்தப்படும். ஆனால் பட்ஜெட் தினத்தில் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகம் நடத்துவது எப்போதும் இல்லாத ஒன்று. 2000-க்குப் பிறகு முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடைசியாக 2025-ல் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு முன் 2015-ல் அருண் ஜெட்லி பட்ஜெட் சனிக்கிழமை (பிப்ரவரி 28) தாக்கல் செய்தார். இதுவரை ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில்லை, இதுவே முதல் முறை என்பதால் இந்த பட்ஜெட் தொடர்ந்து ஸ்பெஷலாக மாறி வருகிறது.

பட்ஜெட் நாளில் பங்குச்சந்தை ஓப்பன்.. சன்டே லீவ் கிடையாது.. ரெடியாக இருங்க..!!

பட்ஜெட் தினத்தில் பங்குச் சந்தை திறந்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

பட்ஜெட் என்பது நாட்டின் பொருளாதார கொள்கைகள், வரி மாற்றங்கள், செலவு திட்டங்கள், தொழிற்துறை சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அறிவிக்கும் மிக முக்கியமான விஷயமாகும். இந்த அறிவிப்புகள் பங்குச் சந்தை, வட்டி விகிதங்கள், துறை சார்ந்த வளர்ச்சி, நிறுவனத்தின் லாபம், முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றை உடனடியாக பாதிக்கும். எனவே, பட்ஜெட் அறிவிப்புகளை உடனடியாக சந்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சந்தை மூடப்பட்டிருந்தால், பட்ஜெட் அறிவிப்புகளுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. இது சந்தை ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இது முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம்.

எனவே, பட்ஜெட் தினத்தில் சந்தை திறந்திருப்பது மூலம் முதலீட்டாளர்களுக்கு உடனடியாக இழப்பை குறைக்க எதிர்வினையாற்ற வாய்ப்பை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் பட்ஜெட் நாளில் சந்தை நகர்வுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+