ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்குப் பின்பு டெலிகாம் துறை பெரிய அளவில் மாறியுள்ளது, 3ஜி சேவைக்காக அல்லாடிக்கொண்டு இருக்க மக்களுக்கு 4ஜி சேவை மிகவும் எளிதாக அதே நேரம் மலிவான விலையும் கிடைத்தது.
இந்த நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி சேவை அளிப்பதற்கான பணிகளை வேக வேகமாகச் செய்து வரும் நிலையில், தற்போது அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகம் செய்வதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது, இதற்காக டிசிஎஸ் நிறுவனத்துடன் 16000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தைக் கையெழுத்திட உள்ளது.
இந்த நிலையில் BSNL நிறுவனத்திடம் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் முதல் 4ஜி
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீண்டும் லாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதற்காகப் பெரும் தொகையை ஒதுக்கப்பட்டு இருக்கும் வேளையில் 4ஜி சேவையை வருகிற நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 5ஜி சேவை வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என BSNL மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிகே புர்வார்
இதேபோல் அடுத்த 18 மாதத்திற்குள் பிஎஸ்என்எல் சுமார் 1.25 மொபைல் சைட்களில் 4ஜி சேவை அளிக்கத் திட்டமிட்டு உள்ளோம் என BSNL சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பிகே புர்வார் தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ்
மத்திய அரசின் Centre for Development of Telematics (C-DoT) அமைப்பு டிசிஎஸ் உடன் இணைந்து கோர் 4ஜி சொல்யூஷன்-ஐ சொந்தமாகத் தயாரித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவை அளிக்கப்பட உள்ளது, பிஎஸ்என்எல்-ல் தற்போது 111 மில்லியன் வையர்லெஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
டெலிகாம் கருவிகள்
இதேபோல் 4ஜி சேவைக்காகப் பிஎஸ்என்எல் வாங்கும் டெலிகாம் கருவிகளை மென்பொருள் மூலம் 5ஜி சேவையை அளிக்கும் கருவிகளாக மாற்ற முடியும் பிகே புர்வார் தெரிவித்துள்ளார். இதேபோல் ஆகஸ்ட் 15, 2023க்குள் டெலிகாம் துறை அமைச்சர் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications