டெல்லி: அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் தங்களுடைய 4ஜி சிம் கார்டுகளை ஏடிஎம் போன்ற வென்டிங் இயந்திரங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே 4ஜி சிம்மிற்காக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை துறையில் தனியாரின் ஆதிக்கம் வலுவாக இருக்கிறது. குறிப்பாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக மாறிவிட்டது.

இந்த பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவதாக இருக்கிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் பெருமளவில் தன்னை மேம்படுத்தி வருகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய 4ஜி சிம்களை பெறுவதற்காக பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவை இல்லை என தெரிவித்துள்ளது. இதற்காக ஏடிஎம் போன்ற தானாகவே சிம் கார்டுகளை வழங்கக்கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் செயலி (BSNL Self Care app) வாயிலாக புதிய சிம் கார்டினை பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
சிம் வென்டிங் இயந்திரங்கள் வாயிலாக இந்த செயலியை பயன்படுத்தி எளிதாக 4ஜி சிம்கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் வென்டிங் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இவை அதிகமாக மக்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் பொருத்தப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் இவற்றின் வாயிலாக புதிய சிம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் எந்திரங்களை போலவே இதுவும் 24 மணி நேரமும் செயல்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த வெண்டிங் இயந்திரங்கள் வைக்கப்பட இருக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்குவதற்காகவும் சில இடங்களில் 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் வழங்குவதற்காகவும் தயாராகி வருகிறது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்தது காட்சிப்படுத்தியது.
குறிப்பாக ஸ்பேம் கால்களை கண்டறிந்து அவற்றை தடுப்பது உள்ளிட்டவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் 1 லட்சம் மொபைல் டவர்களை 4ஜி சேவை வழங்கக் கூடிய வகையில் அப்கிரேட் செய்வதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications