4ஜி சிம் கார்ட் விற்பனை செய்ய இப்படியொரு செட்அப்-ஆ.. BSNL கலக்குறாங்களே..!

டெல்லி: அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் தங்களுடைய 4ஜி சிம் கார்டுகளை ஏடிஎம் போன்ற வென்டிங் இயந்திரங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே 4ஜி சிம்மிற்காக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை துறையில் தனியாரின் ஆதிக்கம் வலுவாக இருக்கிறது. குறிப்பாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக மாறிவிட்டது.

 4ஜி சிம் கார்ட் விற்பனை செய்ய இப்படியொரு செட்அப்-ஆ.. BSNL கலக்குறாங்களே..!

இந்த பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவதாக இருக்கிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் பெருமளவில் தன்னை மேம்படுத்தி வருகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய 4ஜி சிம்களை பெறுவதற்காக பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவை இல்லை என தெரிவித்துள்ளது. இதற்காக ஏடிஎம் போன்ற தானாகவே சிம் கார்டுகளை வழங்கக்கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் செயலி (BSNL Self Care app) வாயிலாக புதிய சிம் கார்டினை பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.

சிம் வென்டிங் இயந்திரங்கள் வாயிலாக இந்த செயலியை பயன்படுத்தி எளிதாக 4ஜி சிம்கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் வென்டிங் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இவை அதிகமாக மக்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் பொருத்தப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் இவற்றின் வாயிலாக புதிய சிம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் எந்திரங்களை போலவே இதுவும் 24 மணி நேரமும் செயல்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த வெண்டிங் இயந்திரங்கள் வைக்கப்பட இருக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்குவதற்காகவும் சில இடங்களில் 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் வழங்குவதற்காகவும் தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்தது காட்சிப்படுத்தியது.

குறிப்பாக ஸ்பேம் கால்களை கண்டறிந்து அவற்றை தடுப்பது உள்ளிட்டவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் 1 லட்சம் மொபைல் டவர்களை 4ஜி சேவை வழங்கக் கூடிய வகையில் அப்கிரேட் செய்வதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+